Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யா படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு!
நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படப்பிடிப்பால், அடையாறு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தின் ஷூட்டிங் சென்னைப் பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் அடையாறு பழைய மேம்பாலத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
இருநூறுக்கும் அதிகமான துணை நடிகர் நடிகைகள் நடனமான, அவர்களுக்கு முன் சூர்யா ஆடிக் கொண்டிருப்பது போல காட்சி எடுக்கப்பட்டது.
இதைப் பார்க்க, வாகனங்களில் வந்தவர்களும் பொதுமக்களும் குவிந்துவிட, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம் சிக்னலிலிருந்து இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.
கொளுத்தும் வெயிலிலில் வாகனங்கள் நடுரோட்டில் நின்றதால் பொதுமக்கள் கடுப்படைந்தனர்.
ஏற்கெனவே திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில், மக்களின் குடிநீர் குளத்தை அசுத்தப்படுத்தியதற்காக ஏழாம் அறிவு படக்குழுவினரை மக்கள் விரட்டியடித்தது நினைவிருக்கலாம்!