Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
30 ஆண்டுக்கு பின் வந்த புரடக்ஷன் கார்!
இன்றைக்கு வடிவேலு உட்கார்ந்துள்ள இடத்தில் அந்தக் காலத்தில் அம்சமாக அமர்ந்திருந்தவர் சுருளிராஜன். கிட்டத்தட்ட அத்தனை சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தவர் சுருளி.
அவர் இல்லாமல் ரஜினி, கமல் படங்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு இருவரது படங்களிலும் தவறாமல் நடித்து வந்தவர். குறிப்பாக ரஜினியின் படங்களில் தவறாமல் சுருளியைப் பார்க்கலாம்.
இன்றைக்கு பிரபலமாக இருக்கும் மதுரை ஸ்லாங் காமெடியை அன்றைக்கே பாப்புலராக்கியிருந்தவர் சுருளிராஜன்.
மறைந்த சுருளிராஜன் இப்போது வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார் விவேக் மூலமாக. சுந்தர்.சி. நடிக்க, ஏ.வெங்கடேஷ் இயக்க, உருவாகும் வாடா படத்தில் சுருளிராஜன் கெட்டப்பில் நடிக்கிறார் விவேக்.
அவரது ஹேர்ஸ்டைல் உள்பட அப்படியே சுருளிராஜனை பிரதிபலிக்கும் வகையில் வேடமிட்டு நடிக்கும் விவேக், இப்படத்திற்காக ஒரு பெரிய சுருளிராஜனின் படத்தைக் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பு பல இடங்களில் தேடியும் படம் கிடைக்கவில்லை.
இறுதியில் சுருளிராஜனின் மனைவியை அணுகியுள்ளனர். கணவர் மறைவுக்குப் பின்னர் எந்த சினிமா நிறுவன காரும் தனது வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வீடு தேடி வந்ததால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் சுருளிராஜனின் மனைவி.
பூஜை அறையில் வைத்திருந்த பெரிய சைஸ் சுருளிராஜன் படத்தை எடுத்துக் கொடுத்து கண்ணீர் விட்டுள்ளார்.
முப்பது வருஷத்துக்கு முன் அவரை ஷூட்டிங்கிற்கு அழைப்பதற்காக எங்கள் வீட்டிற்கு புரொடக்ஷன் கார் வந்தது. அதன் பிறகு இப்போதுதான் புரொடக்ஷன் கார் வந்திருக்கிறது என உணர்ச்சிவசப்பட்டாராம் சுருளியின் மனைவி.
மேலும், விவேக்கைத் தொடர்பு கொண்ட அவர், அவரது கேரக்டரை படத்தில் பயன்படுத்துவதற்காக நன்றியும் கூறினாராம்.