நமீதாவை நசுக்கிய ரசிகர்கள்!

நமீதா நடித்த கவர்ச்சிகரமான தமிழ்ப் படங்கள் மூலம் கேரளாவிலும் நமீதாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். இந்த நிலையில் பிளாக் ஸ்டாலியன் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் நமீதா. இது நமீதாவின் முதல் மலையாளப் படம்.
பிரமோத் பப்பன் இயக்குகிறார். கலாபவன் மணிதான் நாயகன். இப்படத்தில் நமீதா லாரா சிங் என்ற பார் டான்ஸர் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்திற்காக பெரும் தொகையை அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனராம். மலையாள சினிமாவில் எந்த நாயகியும் இதுவரை வாங்கியிராத சம்பளமாம் இது.
சமீபத்தில் அதிராம்பள்ளி பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது நமீதா வந்திருப்பதைக் கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டோடி வந்துள்ளனர். நமீதாவை கிட்டக்கப் போய் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், அவருக்கு படப்பிடிப்பு முடியும் வரையில் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.
ஆனால் அதையும் தாண்டி பொங்கிப் பெருகி விட்டனர் ரசிகர்கள். நமீதாவை முற்றுகையிட்ட ரசிகர்களிடமிருந்து அவரை அரும்பாடுபட்டு மீட்டனராம்.
இருந்தாலும் இதனால் நமீதா அப்செட் ஆகவில்லையாம். மாறாக தன் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போய் விட்டாராம்.
இதுகுறித்து நமீதா கூறுகையில், எனது ரசிகர்களை நான் நேசிக்கிறேன். அவர்களது அன்பையும், அதனால் ஷூட்டிங் ஸ்பாட்களில் ஏற்படும் இடையூறுகளையும் நான் பெரிதுபடுத்துவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த வழிகளில் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
நிறைய மலையாளப் படங்களில் நடிக்க நான் தயார். கிளாமர் கேரக்டர்கள் கொடுத்தால் கூட நான் ரெடிதான்.
பிளாக் ஸ்டாலினியனில் எனக்கு கிளாமர் ரோல்தான். ஆனால் நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சியில்தான் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். அந்த லொகேஷன் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் பசுமைதான். அருமையான கிளைமேட். இந்தியாவிலேயே படப்பிடிப்புக்கு உகந்த அருமையான லொகேஷன் இதுதான் என நினைக்கிறேன்.
இங்கு இந்த அருவியின் பின்னணியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையும் எனக்கு வந்து விட்டது என்றார் நமீதா.
ஆம்பிவேலியில் வீடு வாங்கியாகி விட்டது, அடுத்து அதிராம்பள்ளியா...?


Click it and Unblock the Notifications











