Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!
மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பும் வழங்கியுள்ளது இலங்கை அரசு.
ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள்.
அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு. இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும் விவேக்கும் இன்னும் கூட இந்தியாவுக்குத் திரும்பவில்லை.
இருவரும் கிட்டத்தட்ட இலங்கையின் நிரந்தர விருந்தாளிகளாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். மேலும் சல்மான் கானும் ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சேயும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.
வடக்கு இலங்கையில் இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பல லொக்கேஷன்களில் சல்மான்கான் தனது ரெடி படத்தை எடுக்கிறார். இரண்டு மாத காலம் நடக்கும் நடக்கும் இந்தப் படப்பிடிப்புக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு தருகிறது. அசின்- சல்மான் ஆகிய நட்சத்திரங்களுக்கு மட்டும் உச்சபட்ச இஸட் பிரிவு பாதுகாப்பைத் தர உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே.
இதைத் தொடர்ந்து கமாண்டோ வீரர்கள் சூழ இலங்கையில் நடமாடுகின்றனர் இவ்விருவரும்.
உண்மையில் இந்தப் படம் மொரீஷியஸில் ஷூட் பண்ணத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் ராஜபக்சேயின் உபசரிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த நாடும் வேண்டாம், இலங்கையே போதும் என்று முடிவு செய்துவிட்டாராம்.