Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கந்தசாமி படப்பிடிப்பில் பரபரப்பு!
இதனால் படப்பிடிப்பே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. சுமார் ரூ. 40 கோடி செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கின்றனர். திருட்டுப் பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தை இயக்குகிறார்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் கந்தசாமி குழு மெக்ஸிகோ செல்லவிருக்கிறது. அதற்கு முன் சென்னையில் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்காக திரைப்பட நகரில் கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இன்று காலை 6 மணிக்கு விக்ரம், ஸ்ரேயா, சுசி கணேசன் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் திரைப்பட நகருக்கு வந்தனர்.
அங்குள்ள பெரிய மீன் நுழைவாயிலின் பின்புறம் ஒரு காட்சியைப் படமாக்க முயன்றபோது, அங்கிருந்த வேப்ப மரம் ஒன்றில், குபுகுபுவென பால் கொட்டியது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரேயா, விக்ரம், சுசி கணேசன் மற்றும் குழுவினர் அனைவரும் திரண்டு நின்று அதை வேடிக்கைப் பார்த்தனர்.
இதற்குள் வேப்ப மரத்தில் பால் வடியும் செய்தி பரவ, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அங்கே கூடிவிட்டனர். சில பெண்களுக்கு அம்மன் அருள் வந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.
இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து நடந்தது.
மரங்களில் இருந்து பால் போன்ற திரவம் வடிவது இயற்கையான நிகழ்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.