தமிழில் ஒரு 'கெளபாய்' படம்!

By Staff

Padmapriya and Sandhya in Irumbu Kottai Murattu Singam
நான் ஒரு முழுமையான தமிழ்ப் பெண். தமிழ்ப் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்னைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லையே', என்கிறார் நடிகை பத்மப்பிரியா.

நெல்லை விக்கிரமாசிங்கபுரம் பகுதியில் 'இரும்புகோட்டை முரட்டு சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஷூங்டிங் ஸ்பாட்டில் நடிகை பத்மபிரியா கூறியதாவது:

நான் தமிழகத்தை சேர்ந்தவள். தாய்மொழி தமிழ்தான். அம்மா நெல்லை மாவட்டம் கோடகநல்லூரை சேர்ந்தவர். அப்பா வேலூர் மாவட்டம். நான் எம்பி படித்து விட்டு ஆய்வு மேற்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன். பின் வேலை பார்த்து கொண்டே மலையாள படத்தில் நடித்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 30 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் தவமாய் தவமிருந்து படம் உட்பட 6 படத்தில் நடித்துள்ளேன். எல்லா படத்திலும் எனக்குண்டான கேரக்டரை ரசித்து நடித்துள்ளேன். தொடர்ந்து தமிழல் நடிக்க விரும்புகிறேன். ஆனால் என்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் 'கெளபாய்' பெண்ணாக நடிக்கிறேன். நீண்ட நாளைக்குப் பிறகு 'கெளபாய்' படம் தமிழில் வருவது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இயக்குநர் ஒவ்வொரு சீனையும் ரசித்து எடுக்கிறார். மக்களிடம் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லா ஊரும் அழகாய் இருக்கிறது. எனக்கு தென்காசி, வீரவநல்லூரில் உறவினர்கள் இருக்கிறார்கள். தமிழ் படங்களில் பெரும்பாலும் என் சொந்த குரலிலேயே பேசி வருகின்றேன் என்றார் பத்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X