Don't Miss!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழில் ஒரு 'கெளபாய்' படம்!
நெல்லை விக்கிரமாசிங்கபுரம் பகுதியில் 'இரும்புகோட்டை முரட்டு சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஷூங்டிங் ஸ்பாட்டில் நடிகை பத்மபிரியா கூறியதாவது:
நான் தமிழகத்தை சேர்ந்தவள். தாய்மொழி தமிழ்தான். அம்மா நெல்லை மாவட்டம் கோடகநல்லூரை சேர்ந்தவர். அப்பா வேலூர் மாவட்டம். நான் எம்பி படித்து விட்டு ஆய்வு மேற்கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன். பின் வேலை பார்த்து கொண்டே மலையாள படத்தில் நடித்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 30 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் தவமாய் தவமிருந்து படம் உட்பட 6 படத்தில் நடித்துள்ளேன். எல்லா படத்திலும் எனக்குண்டான கேரக்டரை ரசித்து நடித்துள்ளேன். தொடர்ந்து தமிழல் நடிக்க விரும்புகிறேன். ஆனால் என்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் 'கெளபாய்' பெண்ணாக நடிக்கிறேன். நீண்ட நாளைக்குப் பிறகு 'கெளபாய்' படம் தமிழில் வருவது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இயக்குநர் ஒவ்வொரு சீனையும் ரசித்து எடுக்கிறார். மக்களிடம் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லா ஊரும் அழகாய் இருக்கிறது. எனக்கு தென்காசி, வீரவநல்லூரில் உறவினர்கள் இருக்கிறார்கள். தமிழ் படங்களில் பெரும்பாலும் என் சொந்த குரலிலேயே பேசி வருகின்றேன் என்றார் பத்மா.