Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தமிழில் ஒரு 'கெளபாய்' படம்!
நெல்லை விக்கிரமாசிங்கபுரம் பகுதியில் 'இரும்புகோட்டை முரட்டு சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஷூங்டிங் ஸ்பாட்டில் நடிகை பத்மபிரியா கூறியதாவது:
நான் தமிழகத்தை சேர்ந்தவள். தாய்மொழி தமிழ்தான். அம்மா நெல்லை மாவட்டம் கோடகநல்லூரை சேர்ந்தவர். அப்பா வேலூர் மாவட்டம். நான் எம்பி படித்து விட்டு ஆய்வு மேற்கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன். பின் வேலை பார்த்து கொண்டே மலையாள படத்தில் நடித்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 30 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் தவமாய் தவமிருந்து படம் உட்பட 6 படத்தில் நடித்துள்ளேன். எல்லா படத்திலும் எனக்குண்டான கேரக்டரை ரசித்து நடித்துள்ளேன். தொடர்ந்து தமிழல் நடிக்க விரும்புகிறேன். ஆனால் என்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் 'கெளபாய்' பெண்ணாக நடிக்கிறேன். நீண்ட நாளைக்குப் பிறகு 'கெளபாய்' படம் தமிழில் வருவது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இயக்குநர் ஒவ்வொரு சீனையும் ரசித்து எடுக்கிறார். மக்களிடம் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லா ஊரும் அழகாய் இருக்கிறது. எனக்கு தென்காசி, வீரவநல்லூரில் உறவினர்கள் இருக்கிறார்கள். தமிழ் படங்களில் பெரும்பாலும் என் சொந்த குரலிலேயே பேசி வருகின்றேன் என்றார் பத்மா.