Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? - அபிஷேக் விளக்கம்
ராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி. இப்படத்தை தமிழில் ராவணன் என்ற பெயரில் அவர் வெளியிடவுள்ளார்.
தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ், பிரியா மணி, கார்த்திக், ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தமிழிலும் அபிஷேக் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்கிறார்.
அபிஷேக் ஏன் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது:
மணிரத்தினம் ராவண் படத்தை இயக்க முடிவு செய்தபோது இந்தியில் மட்டுமே இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் தமிழிலும் இதைக் கொண்டுவர தீர்மைனித்தார். இந்தியில் நான் நடித்த பீரா கதாபாத்திரத்தை தமிழில் தேவ் என்ற பெயரில் செய்ய கேட்டுக் கொண்டார். நானும் ஏற்றுக் கொண்டேன்.
ஒத்துக் கொண்டாலும் கூட என்னால் தமிழில் அதைச் செய்ய முடியாது என்று இப்போது தோன்றியது. காரணம் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாத ஒரு மொழியில் நடிப்பது என்பது சரியாக இருக்காது.
எனவே தமிழில் நடிக்க விரும்பவில்லை என்று மணிரத்தினத்திடம் கூறிவிட்டேன். ஒரு நடிகருக்கு நடிக்கும் படத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம், ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் நடிக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் அபிஷேக்.
அபிஷேக் மறுத்ததால்தான் பிருத்விராஜை நடிக்க வைத்தாராம் மணிரத்னம்.
இப்போது வேகமாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார் அபிஷேக் பச்சன் என்பது கூடுதல் தகவல்.