பாண்டு மகன் 'பட்டாளம்' ஹீரோ!

சில்லுன்னு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் புதிய படம் பட்டாளம். லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகன் புதுமுகம் குரு.
இந்தப் படத்துக்காக இவரை தேர்ந்தெடுத்தபோது, அவர் பாண்டுவின் மகன் என்பது இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்குமே தெரியாது. ஹீரோவுக்கு ஆள் தேடுகிறார்கள் என்பது தெரிந்ததுமே, குரு எல்லோரையும் போல இயக்குநரைப் போய் பார்த்துள்ளார்.
அவரது தோற்றம் அனைவருக்கும் பிடித்துப் போக உடனே ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். சூட்டிங் போகும் சமயத்தில்தான் குருவின் தந்தை பிரபல நடிகர் பாண்டு என்பதே தெரிந்திருக்கிறது. அதன் பிறகு குருவுக்கு நடனம், சண்டை போன்றவற்றில் போதிய பயிற்சி கொடுத்து படப்பிடிப்புக்கு பெங்களூர் கூட்டிப் போனார்களாம்.
பாண்டுவும் தன் மகன் விரும்பும் வேலையைச் செய்து கொள்ளட்டும் என விட்டு விட்டாராம். அதனால்தான் கடைசி நிமிடம் வரை அவரது விருப்பத்தில் குறுக்கிடவில்லையாம்.
பெங்களூரில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு வெளிநாடு போகப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











