எஸ்.ராமகிருஷ்ணனை பாட்டெழுத வைத்த இசைஞானி!

முழுக்க முழுக்க திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் எடுக்கப்படும் படம் படித்துறை. பாலுமகேந்திராவின் சீடரான சுகா இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், இசைஞானி இளையராஜா இசை தர ஒப்புக் கொண்டாராம்.
படத்தில் பாடலாசிரியர்களாக இரண்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறார் ராஜா. அவர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் எஸ் ராமகிருஷ்ணன். இருவருமே ஆரம்பத்தில் பாடல் எழுத சற்றுத் தயங்க, இளையராஜாதான் அவர்களை உற்சாகப்படுத்தி பாட்டெழுத வைத்துள்ளார்.
"என் படத்துக்கு இளையராஜாதான் இசை என்பதில் இன்று நேற்றல்ல... பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய காலத்திலேயே தீர்மானமாக இருந்தேன். நானும் இசையைப் படித்தவன். ராஜாவின் இசைக்கு என்னைக் கொடுத்தவன். படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுமே முத்திரை பதிக்கும்..." என்கிறார் இயக்குநர் சுகா.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர் நடிகர் ஆர்யா. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இல்லையாம்!


Click it and Unblock the Notifications











