Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹீரோயின் கன்னத்தை வெறித்தனமாக கடித்து காயப்படுத்திய விக்னேஷ்!
விக்னேஷ் நாயகனாக நடிக்கும் படம் ஈசா. அவருக்கு ஜோடியாக லக்ஷனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலம் சுற்று வட்டாரத்தில் நடந்தது.
ஹீரோயின் மீதான அன்பு அதிகமாகி, அவரது கன்னத்தைக் கடித்து வெளிப்படுத்துகிறாராம் ஹீரோ. இந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும். எனவே ஹீரோயினுக்கு வலிப்பது போல கடியுங்கள் என்று ஹீரோவிடம் கூறியுள்ளார் இயக்குநர் பால கணேஷா.
பயந்து போன நாயகி லக்ஷனா, கடிப்பது போல நடியுங்கள், நான் வலிப்பது போல நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதை இயக்குநர் ஏற்கவில்லை போலும்.
இதையடுத்து நிஜமாகவே விக்னேஷ் ஹீரோயின் கன்னத்தை கடித்துள்ளார். இதனால் வலியால் அலறியுள்ளார் லக்ஷனா.
ஆனாலும் விடாத விக்னேஷ், லக்ஷனாவை மிக பலமாக கடித்துள்ளார். இதனால் கன்னத்தில் பல் பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
விக்னேஷின் செயலால் கடும் கோபமடைந்த லக்ஷனா, திட்டித் தீர்த்து விட்டார். படப்பிடிப்புக் குழுவினர் உள்ளே புகுந்து லக்ஷ்னாவை சமாதானப்படுத்தியுள்ளனர். கன்னத்தில் பல் பதிந்த இடத்தில் ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுத்து ஓய்வெடுக்க வைத்தனராம்.
இதுகுறித்து லக்ஷனா கூறுகையில், உண்மைதான். சம்பந்தப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் சொன்னவுடன் ஹீரோ கடிப்பது போல நடிக்கட்டும். நான் வலிப்பது போன்று நடிக்கிறேன் என்றேன்.
ஆனால் விக்னேஷோ, நிஜமாகவே கடித்து விட்டார். இதனால் பல் பதிந்து ரத்தம் கொட்டியது. நான் வலியால் துடித்துப் போய் விட்டேன். பின்னர் ஐஸ் ஒத்தடம் கொடுத்தனர்.
ரத்தம் வரும் அளவுக்கு கடித்ததால், ஹீரோவை திட்டி விட்டேன். எனக்கு ஆதரவாக யூனிட்காரர்களும் திட்டினார்கள்.
இருப்பினும் படத்தின் நாயகன் என்பதால் இதை நான் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டேன் என்றார் லக்ஷனா.
கிரியேட்டிவிட்டி தவறல்ல, ஆனால் கிறுக்குத்தனம்...?
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!