நமீதா: கண் மூடிய படப்பிடிப்பு குழு!

பில்லா தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது.
தமிழில் ரஜினி நடிப்பில் வந்த பில்லா, மீண்டும் அதே பெயரில் அஜீத் நடித்து வெளியானதல்லவா!. அந்த ரீமேக்கை மீண்டும் 'ரீமேக்கு'கிறார்கள் தெலுங்கில். கில்லி புகழ் குணசேகர் இயக்குகிறார். பிரபாஸ் நாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இதில் ஒரு நாயகியாக அனுஷ்காவும், மற்றொரு கவர்ச்சி நாயகியாக நமீதாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது.
நமீதா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அவர் நீச்சல் உடையில் வரும் காட்சிகள் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் படமாக்கப்பட்டன.
நீச்சல் உடையில் நமீதா வருவதை படப்பிடிப்பு குழுவினரே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். நீச்சல் உடையில் அவர் கவர்ச்சியாக நடந்து வருவதையும், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி உட்கார்ந்திருப்பதையும், ஜொள் வடிய பார்த்தார்களாம்!
இதைக் கவனித்த நமீதாவின் 'மகா சிந்தனை'யில் உதித்த்து ஒரு யோசனை!.
படப்பிடிப்பில் பணிபுரியும் ஆண்கள் தன்னை பார்த்து ரசிக்கவும் கூடாது... அதே சமயம் அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொள்ளக்கூடாது... அதற்காக என்ன செய்யலாம்? என்று யோசித்த அவருக்கு ஒரு அசத்தல் ஐடியா வந்ததாம்.
அதன்படி, நீச்சல் உடை அணிந்து கொண்டு காமிராவை நோக்கி அவர் வரும்போதெல்லாம், 'அண்ணா, அண்ணா எல்லோரும் கண்ணை மூடிக்குங்கோ...' என்று தனக்குத் தெரிந்த தெலுங்கில் தமாஷாக சொன்னாராம்.
அண்ணன் சென்டிமெண்டுக்கு கட்டுப்பட்டு படப்பிடிப்பு குழுவினர் சில நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்களாம்.
நமீதா சம்பந்தப்பட்ட நீச்சல் உடை காட்சிகளை படமாக்கி முடித்தபின், அனுஷ்கா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளை படமாக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் இப்படியெல்லாம் எதும் செண்டிமெண்ட் குண்டு வீசவில்லை என்பது படப்பிடிப்புக் குழுவினருக்கு பெரிய 'ஆறுதல்'.
நமீதாவுக்குக் கூட வெட்கம் வருமா?


Click it and Unblock the Notifications











