தமிழ் - இந்தி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்! - நாளை நடக்கிறது
இது கிரிக்கெட் சீஸன்... மக்களும் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க தயாராக இல்லை. எனவே சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர்.
முதல் கட்டமாக தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை (மார்ச் 5) தொடங்குகிறது.
இதில் மொத்தம் ஆறு போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். ஸ்டைலில் 20 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ் நடிகர்களின் அணிக்கு 'சௌத் சூப்பர் ஸ்டார்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.
இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ராந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக்ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில்ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோஹைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராதிகாவின் ராடான் டிவி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications











