Don't Miss!
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தமிழ் கிராம அடையாளத்தை நினைவூட்ட வரும் 'வாகை சூடவா'!
களவாணி என்ற மிகப் பெரிய ஹிட் படம் தந்த சற்குணம் இயக்கும் இரண்டாவது படம் வாகை சூடவா.
இந்தப் படத்துக்காக கண்டெடுத்தான் காடு என்ற கிராமத்தையே உருவாக்கியிருக்கி, அதில் 60 குடும்பங்களை மூன்று மாதங்களுக்கும் மேல் வசிக்க வைத்திருக்கிறார் சற்குணம். இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். போலியோ சொட்டு மருந்து கொடுக்க வந்த செவிலியர்கள், இதை நிஜ கிராமமென்று நம்பி, மருந்து போட குழந்தைகளைக் கொண்டு வாருங்கள் என்றார்களாம்!
கருப்பட்டி பாலில் டீ போட்டு அதை இரண்டு பைசா, மூன்று பைசாவுக்கு விற்கும் கதாநாயகிக்கும், பியூசி முடித்துவிட்டு வாத்தியார் வேலைக்குதான் போவேன் என்ற வைராக்கியத்தோடு வசிக்கும் நாயகனுக்குமான காதலை, மண்ணும் மனிதமும் இழையோட சொல்லியிருக்கிறாராம் இந்தப் படத்தில் சற்குணம்.
விமல்தான் ஹீரோ. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான கிராமத்து ஹீரோவாக வருகிறார். படத்தின் முக்கிய பாத்திரத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், இன்றைக்கு பலரும் கேள்விப்பட்டிராத, அன்றைய கிராமத்து உணவுகளை காட்டியிருக்கிறார்களாம். சோளச் சோறு, கேழ்வரகு பணியாரம், குழி பணியாரம், சுட்ட கம்பங் கதிர், சுட்ட கருவாடு, வரகரிசி சோறு, கேழ்வரகு கூழ்... இப்படி 50 வகை கிராமத்து உணவுகளை தயார் செய்து அவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் ஸ்டில்களில் அவற்றைப் பார்க்கும்போதே நாக்கில் நீர் சுரக்கிறது. எடுத்தவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்!!
எம் ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்துவும் அறிவுமதியும் எழுதியுள்ளனர். எஸ் முருகானந்தம் தயாரித்துள்ளார்.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்