Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யானை! - தப்பிய கார்த்தி, ரீமா!!
சாலக்குடியில், ஷூட்டிங் போனபோது யானைக் கூட்டம் புகுந்ததால் ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்குக்காக போடப்பட்டிருந்த செட்டுகள் நாசமாகின. ஹீரோ கார்த்தி, ஹீரோயின் ரீமா சென் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்தனர்.
Click here for more images |
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆயிரத்தில் ஒருவன். பருத்தி வீரன் கார்த்திதான் நாயகன், ரீமா சென்தான் நாயகி.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வராமாக கேரள மாநிலம் சாலக்குடியில் நடந்து வருகிறது. காட்டுக்குள் பெரிய பெரிய செட் போட்டு படம் பிடித்து வருகின்றனர்.
நேற்று மாலை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட 'கணபதிகள்' உள்ளே புகுந்து விட்டனர். போட்டிருந்த செட்டுக்களை துவம்சம் செய்து விட்டனர். கேமரா உள்ளிட்ட பல சாதனங்களும் இதில் சேதமடைந்தன.
யானைக் கூட்டம் உள்ளே புகுந்ததைப் பார்த்த அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஹீரோ கார்த்தி, ரீமா சென், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு போயிருந்தனர்.
வனத்துறையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். மேலும், தினசரி மாலை சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து விட்டு போய் விடுமாறும், யானைகளால் பிரச்சினை ஏற்படலாம் என்றும் படப்பிடிப்புக் குழுவினரை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.