Don't Miss!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Finance ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. பல மடங்கு ரிட்டர்ன்.. பெண்கள் நோட் பண்ணுங்க.. அசத்தல் திட்டம்
- Technology அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த 'ஜோதிகா'! ரணகளமான படப்பிடிப்பு தளம்!
Recommended Video
ஹைதராபாத்: படப்பிடிப்பு தளத்தில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவர் டிவி நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகை ராக மாதுரி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் ஆந்திர மக்களிடம் மிகவும் பிரபலமானவர்.
இவர் நடித்த ஜோதி என்ற சீரியல் ஆந்திர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரை அவருடன் பணிபுரியும் ஜோதிகா என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் கடுமையாக தாக்கியுள்ளார்.
வந்துட்டான்யா, வந்துட்டான்யா: இந்த போஸ்டரில் மாஸ் தளபதியா, வடிவேலா?
மாயமான சங்கிலி
இதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 16ஆம் தேதி வழக்கம்போல் ஷுட்டிங்கை முடித்துவிட்டு ராக மாதுரி காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து தன்னுடன் பணிபுரிந்த சிகை அலங்கார நிபுணர் ஜோதிகா மீது சந்தேகம் அடைந்த நடிகை ராக மாதுரி போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஜோதிகாவையும் அவரது உதவியாளரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
காரில் கிடந்த செயின்
ஆனால் நகையை எடுக்கவேயில்லை என அடித்துக்கூறினர் ஜோதிகாவும் அவரது உதவியாளரும். இந்நிலையில் மாதுரியின் காரிலேயே அவரது தங்கச் செயின் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைக்காண்டில் இருந்த ஜோதிகா
இல்லாத ஒன்றை கூறி தங்களின் மீது திருட்டு பழி சுமத்திய நடிகை மாதுரியின் மீது கொலைக்காண்டில் இருந்தனர். இந்நிலையில் மாதுரி இருந்த ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ஜோதிகா, மாதுரியின் முடியை இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
பரபரப்பு
இதனால் அந்த படப்பிடிப்பு தளமே அல்லோகளப்பட்டது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.