Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
Raja Bheema.. யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்.. படப்பிடிப்பில் பரபரப்பு!
ராஜ பீமா படப்பிடிப்பில் யானை மேல் இருந்து ஆரவ் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ராஜ பீமா படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடிகர் ஆரவ் யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், தற்போது ராஜ பீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் நரேஷ் இயக்கும் இப்படத்தினை சுரபி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
விலங்கு சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆரவ்வுடன் பீட்டர் என்ற யானையும் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர் .
கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்களுக்கு இடையே படமாக்கி வருகின்றனர். ஒரு காட்சியில் எதிர்பாராத விதமாக ஆரவ் யானை மீதிருந்து கீழே விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக படக்குழுவினர் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், முதலுதவி பெறுவதற்கு முன்னதாகவே மீண்டும் நடிக்க தயாராகி படக்குழுவிற்கு ஆச்சர்யம் தந்துள்ளார் ஆரவ்.
உடற்பயிற்சி மூலம் உடல் வலிமையும், மனத்திடமும் கொண்டதால் ஆரவ், உடனடியாக அடுத்தக் காட்சிக்கு தயாரானதாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன் கூறுகையில், "இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது. இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெறும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்" என்றார்