twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை தொடையை கடித்த பாம்பு

    By Staff
    |

    சூட்டிங் ஸ்பாட்டில் ஆடை மாற்றிக் கொண்டிருந்த நடிகையின் தொடையில் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    புதுமுகம் ஆஷா, குரு ஆகியோர் இணையில் உருவாகி வரும் படம் ஆறுபடை. கோவை அருகே திருமூர்த்தி மலை பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    நேற்று ஒரு பாடலைப் படமாக்கினர். பாடல் காட்சியின்போது உடை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்குச் சென்றார் நடிகை ஆஷா.

    அவர் டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்த ஒரு பாம்பு கீழே விழுந்தது. அதைப் பார்த்து ஆஷா அலறவே, அவரது தொடையைக் குறி வைத்து கொத்தியது.

    தொடையில் பாம்பு கடித்ததால் நடுங்கிப் போன ஆஷா பயத்தில் அலறி மயங்கி விழுந்தார்.

    உடனடியாக விரைந்து வந்த படப்பிடிப்புக் குழுவினர் ஆஷாவை கோவைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X