Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சொந்தக் குரல் சுந்தரிகள் கோலிவுட்டில் இப்போது புது டிரெண்டு உருவாகி வருகிறது. ஆனால், உண்மையில் இது புதுசல்ல, பழைய கள்ளுதான்.அந்தக் காலத்தில் நடிப்பவர்கள் அவர்களது சொந்தக் குரலில் பேசியே நடிப்பார்கள். பலர் தாங்களே பாடவும் செய்தார்கள்.தமிழே தெரியாத தெலுங்கு, மலையாள நடிகைகள் கூட, எழுதி வைத்து, நன்றாக பிராக்டிஸ் செய்து, அழகான தமிழில் பேசிரசிகர்களை அசத்தினார்கள். ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழ்.சுத்தத் தமிழச்சிகள் கூட சொந்தக் குரலில் பேசுவதில்லை. (பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் நடிக்க வருவது இல்லை. அப்படியேவந்தாலும் தமிழுக்கு பதில் டமிள் தான் பேசுவார்கள்).தமிழ்ப் பெண்ணான த்ரிஷா கூட தனது படங்களில் டப்பிங் பேசுவதில்லை, அவருக்குக் குரல் கொடுப்பது இன்னொருவர்.அதேபோல தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த ஸ்னேகாவும் சொந்தக் குரலில் பேசுவதில்லை.தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த, மலையாளப் பெண்ணான அசினுக்கும் இரவல் குரல்தான். நயன்தாராவுக்கும் டப்பிங்குரல்தான். ஜோதிகாவில் ஆரம்பித்து இறக்குமதியான பெரும்பாலான நடிகைகளுக்குமே டப்பிங் குரல் தான் தரப்பட்டு வந்தது.ஆனால் இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.ஸ்னேகா, முதல் முறையாக ஏ.பி.சி.டி படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். தானே விரும்பி இதைச் செய்தாராம் ஸ்னேகா.அதற்காக அவரை தனியே பாராட்டலாம். ஏற்கனவே பார்த்திபன் கனவு படத்தில் அதிகம் பேசாத ஒரு கேரக்டருக்கு மட்டும்(படத்தில் இரட்டை வேடம்) அவரே பேசி நடித்தார்.ஆனால் முதல் முறையாக அவரது முழு கேரக்டருக்கும் ஏபிசிடி படத்தில் சொந்தக் குரலில் பேசி வருகிறாராம். இதை அறிந்துபுதுப்பேட்டை படத்திலும் அவரை சொந்தக் குரலிலேயே பேசுமாறு கேட்டுள்ளாராம் இயக்குனர் செல்வராகவன்.அதேபோல, மும்தாஜும் ஒரு படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறார். இதுதான் காதல் என்பதா என்ற படத்தில்மும்தாஜ், இந்தியில் வசனங்களை எழுதி வைத்துக் கொண்டு அதை தமிழில் பேசி அசத்துகிறாராம். ஜூனூன் தமிழ் போலஇல்லாமல் ரொம்ப நன்றாகவே பேசுகிறார் என்கிறார்கள்.மலையாள நவ்யா நாயரும், அமிர்தம் படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். இவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும்என்றாலும் இதுவரை எந்தப் படத்திலும் அவர் சொந்தக் குரலில் பேசியதில்லை. இப்போது முதல் முறையாக சொந்தக் குரலில்சம்சாரித்து வருகிறார்.ஜோதிகாவும் தொடர்ந்து இரவல் குரலில் பேசி கலக்கி வந்தார். முதல் முறையாக மாயாவி படத்தில் அவரே டப்பிங் பேசினார்.அடுத்தடுத்த படங்களிலும் அவரே பேச முடிவு செய்துள்ளாராம்.அதே போல வார்த்தைகளை பஞ்சு மிட்டாய் தின்பது மாதிரி வாய்க்குள்ளேயே கரைத்துக் கொள்ளும் உதித் நாராயண் போன்றஆசாமிகளை தமிழ் பாட்டு பாட விடாமல் யாராவது தடுத்து நிறுத்தினால் ரொம்ப புண்ணியமாய் போகும்.
கோலிவுட்டில் இப்போது புது டிரெண்டு உருவாகி வருகிறது. ஆனால், உண்மையில் இது புதுசல்ல, பழைய கள்ளுதான்.
அந்தக் காலத்தில் நடிப்பவர்கள் அவர்களது சொந்தக் குரலில் பேசியே நடிப்பார்கள். பலர் தாங்களே பாடவும் செய்தார்கள்.
தமிழே தெரியாத தெலுங்கு, மலையாள நடிகைகள் கூட, எழுதி வைத்து, நன்றாக பிராக்டிஸ் செய்து, அழகான தமிழில் பேசிரசிகர்களை அசத்தினார்கள். ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழ்.
சுத்தத் தமிழச்சிகள் கூட சொந்தக் குரலில் பேசுவதில்லை. (பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் நடிக்க வருவது இல்லை. அப்படியேவந்தாலும் தமிழுக்கு பதில் டமிள் தான் பேசுவார்கள்).
தமிழ்ப் பெண்ணான த்ரிஷா கூட தனது படங்களில் டப்பிங் பேசுவதில்லை, அவருக்குக் குரல் கொடுப்பது இன்னொருவர்.அதேபோல தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த ஸ்னேகாவும் சொந்தக் குரலில் பேசுவதில்லை.
தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த, மலையாளப் பெண்ணான அசினுக்கும் இரவல் குரல்தான். நயன்தாராவுக்கும் டப்பிங்குரல்தான். ஜோதிகாவில் ஆரம்பித்து இறக்குமதியான பெரும்பாலான நடிகைகளுக்குமே டப்பிங் குரல் தான் தரப்பட்டு வந்தது.
ஆனால் இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
ஸ்னேகா, முதல் முறையாக ஏ.பி.சி.டி படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். தானே விரும்பி இதைச் செய்தாராம் ஸ்னேகா.அதற்காக அவரை தனியே பாராட்டலாம். ஏற்கனவே பார்த்திபன் கனவு படத்தில் அதிகம் பேசாத ஒரு கேரக்டருக்கு மட்டும்(படத்தில் இரட்டை வேடம்) அவரே பேசி நடித்தார்.
ஆனால் முதல் முறையாக அவரது முழு கேரக்டருக்கும் ஏபிசிடி படத்தில் சொந்தக் குரலில் பேசி வருகிறாராம். இதை அறிந்துபுதுப்பேட்டை படத்திலும் அவரை சொந்தக் குரலிலேயே பேசுமாறு கேட்டுள்ளாராம் இயக்குனர் செல்வராகவன்.
அதேபோல, மும்தாஜும் ஒரு படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறார். இதுதான் காதல் என்பதா என்ற படத்தில்மும்தாஜ், இந்தியில் வசனங்களை எழுதி வைத்துக் கொண்டு அதை தமிழில் பேசி அசத்துகிறாராம். ஜூனூன் தமிழ் போலஇல்லாமல் ரொம்ப நன்றாகவே பேசுகிறார் என்கிறார்கள்.
மலையாள நவ்யா நாயரும், அமிர்தம் படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். இவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும்என்றாலும் இதுவரை எந்தப் படத்திலும் அவர் சொந்தக் குரலில் பேசியதில்லை. இப்போது முதல் முறையாக சொந்தக் குரலில்சம்சாரித்து வருகிறார்.
ஜோதிகாவும் தொடர்ந்து இரவல் குரலில் பேசி கலக்கி வந்தார். முதல் முறையாக மாயாவி படத்தில் அவரே டப்பிங் பேசினார்.அடுத்தடுத்த படங்களிலும் அவரே பேச முடிவு செய்துள்ளாராம்.
அதே போல வார்த்தைகளை பஞ்சு மிட்டாய் தின்பது மாதிரி வாய்க்குள்ளேயே கரைத்துக் கொள்ளும் உதித் நாராயண் போன்றஆசாமிகளை தமிழ் பாட்டு பாட விடாமல் யாராவது தடுத்து நிறுத்தினால் ரொம்ப புண்ணியமாய் போகும்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!