Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மயங்கி விழுந்த அகத்தியன்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அகத்தியன் இயக்கி வரும் படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இப்படத்தை தனது பாணியில் வித்தியாசமான காதல் கதையுடன் இயக்கி வருகிறார் அகத்தியன்.
விக்ராந்த், பாரதி ஜோடியில் உருவாகி வரும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே கோலிவுட்டில் அதிகமாக உள்ளது.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. பொங்கலுக்கு படத்ைதத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதால் இரவு பகல் பாராமல் அகத்தியன் தீவிரமாக படம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் வேலைப்பளு காரணமாக நேற்று அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. சங்கீதா டப்பிங் தியேட்டரில் ஒலிச்சேர்க்கைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் அகத்தியன். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிகிச்சைக்குப் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பினர். சிறிய ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அவர் மீண்டும் படப் பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.