தப்பினார் ஐஸ்வர்யா! மணிரத்னம் இயக்கும் குரு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் சரிந்து விழந்தது.மணிரத்னம் இயக்கிவரும் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இதற்காக சென்னையில் கடந்த 3 வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.இப்படத்தில் ஒரு காட்சிக்காக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட செட்டிங் போடப்பட்டிருந்தது.அபிஷேக் பச்சன் தனது கம்பெனி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற காட்சி அங்குஎடுக்கப்பட்டன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்தார்.மாலை படப்பிடிப்பு முடிந்து மணிரத்னம், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோர் புறப்பட்டனர். யூனிட்டில்இருந்த ஊழியர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென அந்த பிரமாண்டமான செட் சரிந்து விழந்தது. சாரம் கட்டியிருந்த கட்டைகளும்பலகைகளும் இரும்பு தகடுகளும் சடசடவென சரிந்தன. அதில் சிக்கிக்கொண்ட யூனிட் தொழிலாளர்கள் பலத்தபோராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். இதில் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் செட் சரிந்துள்ளது.புறப்படும் முன் மூவருமே இந்த செட்டின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கும் குரு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் சரிந்து விழந்தது.
மணிரத்னம் இயக்கிவரும் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இதற்காக சென்னையில் கடந்த 3 வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.
இப்படத்தில் ஒரு காட்சிக்காக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட செட்டிங் போடப்பட்டிருந்தது.அபிஷேக் பச்சன் தனது கம்பெனி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற காட்சி அங்குஎடுக்கப்பட்டன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்தார்.
மாலை படப்பிடிப்பு முடிந்து மணிரத்னம், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோர் புறப்பட்டனர். யூனிட்டில்இருந்த ஊழியர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அந்த பிரமாண்டமான செட் சரிந்து விழந்தது. சாரம் கட்டியிருந்த கட்டைகளும்பலகைகளும் இரும்பு தகடுகளும் சடசடவென சரிந்தன. அதில் சிக்கிக்கொண்ட யூனிட் தொழிலாளர்கள் பலத்தபோராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். இதில் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் செட் சரிந்துள்ளது.
புறப்படும் முன் மூவருமே இந்த செட்டின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











