Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஏன் போட்டோ எடுத்தே?' - ஆண்ட்ரியாவின் அலட்டல்
இதனைப் புரிந்து கொண்டு, பல நடிகைகளும் படு கவர்ச்சியான உடைகளில் வருவார்கள். புகைப்படக்காரர்களுக்கும் நடிகைகளுக்குமான ஒரு ரகசிய புரிந்து கொள்ளல் இது!
ஆனால் சில நடிகைகள் இப்படி போட்டோ எடுப்பதை விரும்புவதில்லை. அதாவது தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கெடுபிடி. ஆந்திரா, மும்பை என்று போனால் அதிகபட்ச ஆடைக் குறைப்பும், அட்டகாச போஸ்களும் தரத் தயங்குவதில்லை.
இப்படிப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதல் இரு இடங்கள் அனுஷ்கா மற்றும் ஆன்ட்ரியாவுக்குத்தான்.
அனுஷ்கா தன்னை படமெடுக்க வருபவர்களிடம், எக்ஸ்ட்ரா பைசா தருவீங்களா, என்று கேட்டு மிரள வைக்கிறார் என்றால், ஆண்ட்ரியா கதை தனி. தன்னைப் படமெடுத்த புகைப்படக்காரரை கூப்பிட்டு மிரட்டி, எடுத்த போட்டோவையே அழிக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த எக்ஸ்மேன் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த ஆண்ட்ரியாவை ஒரு இணையதள புகைப்படக்காரர் படமெடுத்துவிட்டார். உடனே அவரை அருகில் அழைத்த ஆண்ட்ரியா, "என்னைக் கேட்காமல் எப்படி படமெடுக்கலாம்" என கோபமாகக் கேட்டதுடன், கேமிராவைப் பிடுங்கி, அதிலிருந்த புகைப்படங்களை அழித்துவிட்டாராம்.
உடனே பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நடிகர் ஜெயம் ரவி, ஆண்ட்ரியாவுக்காக பரிந்து கொண்டு வந்துவிட்டார்.
"தம்பி குடிச்சிருக்கியா.. அதெப்படி நீ எங்களை போட்டோ எடுக்கலாம். நீ எந்தப் பத்திரிகை, ஐடி கார்ட் காட்டு...?" என்றெல்லாம் எகிற, அமைதியாக ஒதுங்கிப் போய்விட்டாராம் புகைப்படக்காரர்.
"புகைப்படமெடுக்க வருந்தி வருந்தி அழைத்த சத்யம் சினிமா நிர்வாகத்தையல்லவா அவர் நியாயமாகக் கேட்டிருக்க வேண்டும். இன்னொன்று இந்த பிரிமியர் ஷோ சமாச்சாரமெல்லாமே ஒரு விளம்பரம்தானே... விளம்பர நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றால் எப்படி!", என்று குமைந்தார் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர்!!