Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கரண் ரொம்ப வசதி! - அஞ்சலியின் அனுபவம்
தம்பி வெட்டோத்தி சுந்தரம்... கரண் நடித்து வெளியாகும் அடுத்த படம் இது. படத்தில் அவருக்கு ஜோடி அஞ்சலி.
இருவரும் இந்தப் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்தப் படக்குழுவினர் நேற்று நிருபர்களைச் சந்தித்து, படம் குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் நாயகி அஞ்சலி கூறுகையில், "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை. எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார்.
எனக்கும், அவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலைகாரா...' என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணியும், படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும்.
இந்த வேடம், இந்த காஸ்ட்யூம் என்று எனக்கு எந்த பிடிவாதமும் இல்லை. நல்ல வேடம், காட்சிக்கேற்ற உடைகளை நான் அணிய தயங்கியதில்லை," என்றார்.
இந்தப் படம் நாகர்கோவில் அருகில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார்.
கரண் பேசும்போது, "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும்'' என்றார்.
அது என்ன வெட்டோத்தி...?
"வெட்டுக்கத்தி மாதிரி அது ஒரு ஆயுதம். ஆனால் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தைத் தரும்," என்றார்கள் இயக்குநர் வடிவுடையானும் தயாரிப்பாளர் செந்தில் குமாரும்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க