twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடல் படல் அங்கீதா சாலக்குடியில் குத்தாட்டம், அருவியில் அட்டகாசம், செஷல்ஸில் செக்ஸி ஆட்டம்,மொரீஷியஸில் முக்காட்டம் என குத்தாட்டத்திற்கு ஏகப்பட்ட லொகேஷன்கள் இருக்கபடு வித்தியாசமாக சுடுகாட்டில் ஒரு குத்துப் பாட்டை கொத்தி எடுத்துள்ளார்கள்ஸ்ரீரங்கா படத்திற்காக.அங்கீதா, சந்தோஷ் ஜோடியில் உருவாகும் ஸ்ரீரங்கா படம் படு வேகமாக வளர்ந்துவருகிறது. இப்படத்தில்தான் இந்த சுடுகாட்டு குத்தாட்டத்தை சுட்டுள்ளார்களாம்.ஹீரோயின் அங்கிதாவை வில்லன் குரூப் காட்டுக்குள் கடத்திக் கொண்டு போய்விடுகிறது. அங்கே ஒரு சுடுகாடு. சுற்றிலும் துப்பாக்கியுடன் வில்லனின் அடியாட்கள்உட்கார்ந்திருக்க நட்ட நடுவே கும்மென குந்தியிருக்கிறார் வில்லன்.அங்கீதாவை அவர் முன் நிறுத்துகிறார்கள் அடிப்பொடிகள். ஆடம்மா ஆடு என்றுதுப்பாக்கி முனையில் உத்தரவிடுகிறார் வில்லன். தோட்டாவுக்குப் பயந்து அங்கிதாதனது அட்டகாச ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். அப்போது பார்த்து செம மழை(வந்துருமே!)மழையில் நனைந்தபடி கவர்ச்சி சொட்டச் சொட்ட வளைந்து நெளிந்து பாம்பாட்டம்ஆடுகிறார் அங்கிதா. அவரது கவர்ச்சி மின்னல் கண்ணைப் பறிக்க வில்லன் கும்பலும்சேர்ந்து ஆடுகிறது.அப்போது பாய்ந்து வருகிறார் ஹீரோ. வில்லன் கும்பலை புரட்டி எடுக்கிறார். கவர்ச்சிபரோட்டா அங்கீதாவுடன் அங்கிருந்து தப்பிக்கிறார். இப்படி ஒரு காட்சியை சமீபத்தில்படமாக்கினார்களாம்.சரி பாட்தோட வரிகளை தெரிஞ்சுக்கலையே.. இதுதான் அந்த பாடலின் தொடக்கவரிகள்:இவனே இவனா,இரவின் அரணாதொடல் படல் சில செய்தவனா என்று ஆரம்பித்து போகிறது பாட்டு.இந்தப் படத்தை இயக்குபவர் பார்கவன். பாட்டுக்கு கொட்டடித்துள்ளவர் ஸ்ரீகாந்த்தேவா. அங்கீதாவின் கவர்ச்சி படம் முழுக்கப் பரவிக் கிடந்தபோதிலும், தேஜாஸ்ரீயும்தேன் போல அவ்வப்போது வந்து வாசித்துள்ளார்.

    By Staff
    |
    சாலக்குடியில் குத்தாட்டம், அருவியில் அட்டகாசம், செஷல்ஸில் செக்ஸி ஆட்டம்,மொரீஷியஸில் முக்காட்டம் என குத்தாட்டத்திற்கு ஏகப்பட்ட லொகேஷன்கள் இருக்கபடு வித்தியாசமாக சுடுகாட்டில் ஒரு குத்துப் பாட்டை கொத்தி எடுத்துள்ளார்கள்ஸ்ரீரங்கா படத்திற்காக.

    அங்கீதா, சந்தோஷ் ஜோடியில் உருவாகும் ஸ்ரீரங்கா படம் படு வேகமாக வளர்ந்துவருகிறது. இப்படத்தில்தான் இந்த சுடுகாட்டு குத்தாட்டத்தை சுட்டுள்ளார்களாம்.

    ஹீரோயின் அங்கிதாவை வில்லன் குரூப் காட்டுக்குள் கடத்திக் கொண்டு போய்விடுகிறது. அங்கே ஒரு சுடுகாடு. சுற்றிலும் துப்பாக்கியுடன் வில்லனின் அடியாட்கள்உட்கார்ந்திருக்க நட்ட நடுவே கும்மென குந்தியிருக்கிறார் வில்லன்.

    அங்கீதாவை அவர் முன் நிறுத்துகிறார்கள் அடிப்பொடிகள். ஆடம்மா ஆடு என்றுதுப்பாக்கி முனையில் உத்தரவிடுகிறார் வில்லன். தோட்டாவுக்குப் பயந்து அங்கிதாதனது அட்டகாச ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். அப்போது பார்த்து செம மழை(வந்துருமே!)

    மழையில் நனைந்தபடி கவர்ச்சி சொட்டச் சொட்ட வளைந்து நெளிந்து பாம்பாட்டம்ஆடுகிறார் அங்கிதா. அவரது கவர்ச்சி மின்னல் கண்ணைப் பறிக்க வில்லன் கும்பலும்சேர்ந்து ஆடுகிறது.

    அப்போது பாய்ந்து வருகிறார் ஹீரோ. வில்லன் கும்பலை புரட்டி எடுக்கிறார். கவர்ச்சிபரோட்டா அங்கீதாவுடன் அங்கிருந்து தப்பிக்கிறார். இப்படி ஒரு காட்சியை சமீபத்தில்படமாக்கினார்களாம்.

    சரி பாட்தோட வரிகளை தெரிஞ்சுக்கலையே.. இதுதான் அந்த பாடலின் தொடக்கவரிகள்:

    இவனே இவனா,

    இரவின் அரணா

    தொடல் படல் சில செய்தவனா என்று ஆரம்பித்து போகிறது பாட்டு.

    இந்தப் படத்தை இயக்குபவர் பார்கவன். பாட்டுக்கு கொட்டடித்துள்ளவர் ஸ்ரீகாந்த்தேவா. அங்கீதாவின் கவர்ச்சி படம் முழுக்கப் பரவிக் கிடந்தபோதிலும், தேஜாஸ்ரீயும்தேன் போல அவ்வப்போது வந்து வாசித்துள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X