Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மலை உச்சியில் நடிக்க பயந்து யாருக்கும் தெரியாமல் தலைதெறிக்க ஓடிய ஹீரோயின்
சென்னை: மலை உச்சியில் நின்று நடிக்க பயந்து கொண்டு நடிகை அனுபமா பிரகாஷ் யாரிடமும் கூறாமல் தப்பியோடிவிட்டார்.
ஏ. கேசவன் இயக்கி வரும் படம் அவளுக்கென்ன அழகிய முகம். கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு கொடைக்கானல் சென்றது.
மலை உச்சி
கொடைக்கானலில் மலை உச்சியில் ஹீரோயின் அனுபமா பிரகாஷை நிற்க வைத்துள்ளார் இயக்குனர். உச்சியில் நின்று நடனம் ஆட அனுபமா பயந்துள்ளார். ஆனால் உச்சியில் தான் அழகாக இருக்கிறது என்று இயக்குனர் ஃபீல் பண்ணியதால் அனுபமாவுக்கு பயத்தை மறைத்துக் கொண்டு நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டெல்லி
படப்பிடிப்பின் இடையே நான் ஹோட்டல் அறை வரை சென்று வருகிறேன் என்று இயக்குனரிடம் கூறிவிட்டு அனுபமா கிளம்பியுள்ளார். அனுபமா திரும்பி வந்துவிடுவார் என்பதால் பேக்கப் செய்யாமல் காத்திருந்திருக்கிறது படக்குழு. நேரம் ஆக ஆக ஹீரோயினை காணவில்லை. இதையடுத்து அவரை தேடிச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அனுபமா
அனுபமா ஹோட்டல் அறைக்கு சென்று தனது பொருட்களை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மதுரை விமான நிலையத்திற்கே சென்றுவிட்டாராம். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பறந்துவிட்டாராம். அனுபமாவின் சொந்த ஊர் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா டெல்லிக்கு சென்ற விஷயம் அறிந்து இயக்குனர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.
சமாதானம்
அடுத்த ஃபிளைட்டிலேயே டெல்லிக்கு சென்ற தயாரிப்பாளர் மலை உச்சிக்கு பயந்து இப்படியாம்மா ஓடி வருவது என்று அனுபமாவிடம் பேசி அவரை சமாதானம் செய்துள்ளார். அதன் பிறகு அனுபமாவை அழைத்து வந்து படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர். ஆளாளுக்கு ஒரு பயம். இந்த அனுபமாவுக்கு உயரம் என்றால் பயம். அதற்கு என்ன செய்ய முடியும் பாவம்.