Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மலை உச்சியில் நடிக்க பயந்து யாருக்கும் தெரியாமல் தலைதெறிக்க ஓடிய ஹீரோயின்
சென்னை: மலை உச்சியில் நின்று நடிக்க பயந்து கொண்டு நடிகை அனுபமா பிரகாஷ் யாரிடமும் கூறாமல் தப்பியோடிவிட்டார்.
ஏ. கேசவன் இயக்கி வரும் படம் அவளுக்கென்ன அழகிய முகம். கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு கொடைக்கானல் சென்றது.
மலை உச்சி
கொடைக்கானலில் மலை உச்சியில் ஹீரோயின் அனுபமா பிரகாஷை நிற்க வைத்துள்ளார் இயக்குனர். உச்சியில் நின்று நடனம் ஆட அனுபமா பயந்துள்ளார். ஆனால் உச்சியில் தான் அழகாக இருக்கிறது என்று இயக்குனர் ஃபீல் பண்ணியதால் அனுபமாவுக்கு பயத்தை மறைத்துக் கொண்டு நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
டெல்லி
படப்பிடிப்பின் இடையே நான் ஹோட்டல் அறை வரை சென்று வருகிறேன் என்று இயக்குனரிடம் கூறிவிட்டு அனுபமா கிளம்பியுள்ளார். அனுபமா திரும்பி வந்துவிடுவார் என்பதால் பேக்கப் செய்யாமல் காத்திருந்திருக்கிறது படக்குழு. நேரம் ஆக ஆக ஹீரோயினை காணவில்லை. இதையடுத்து அவரை தேடிச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அனுபமா
அனுபமா ஹோட்டல் அறைக்கு சென்று தனது பொருட்களை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மதுரை விமான நிலையத்திற்கே சென்றுவிட்டாராம். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பறந்துவிட்டாராம். அனுபமாவின் சொந்த ஊர் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா டெல்லிக்கு சென்ற விஷயம் அறிந்து இயக்குனர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.
சமாதானம்
அடுத்த ஃபிளைட்டிலேயே டெல்லிக்கு சென்ற தயாரிப்பாளர் மலை உச்சிக்கு பயந்து இப்படியாம்மா ஓடி வருவது என்று அனுபமாவிடம் பேசி அவரை சமாதானம் செய்துள்ளார். அதன் பிறகு அனுபமாவை அழைத்து வந்து படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர். ஆளாளுக்கு ஒரு பயம். இந்த அனுபமாவுக்கு உயரம் என்றால் பயம். அதற்கு என்ன செய்ய முடியும் பாவம்.