ஜில் ஜில் அபர்ணா! அபர்ணாவின் அமர்க்களமான கிளாமர் நடிப்பில், முழுக்க முழுக்க லண்டனிலேயே சுடப்பட்டுள்ள நெஞ்சில் ஜில்ஜில், ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகியுள்ளது.இப்போதெல்லாம் கதையால் ரசிகர்களைக் கவருவதை விட தலைப்பிலேயே ரசிகர்களின் நெஞ்சாங்கூட்டுக்குப்புகுந்து விடுகிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள்.அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நெஞ்சில் ஜில் ஜில். படத்தின் தலைப்பிலேயே குளிர வைத்து விட்ட இயக்குநர்செல்வா, படத்தையும் ஜிலுஜிலுவென படைத்துள்ளாராம்.கனகசபை, மனீஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நவ்தீப், அபர்ணா ஜோடி போட்டுஅசத்தியுள்ளனர்.வடிவேலுவும் தன் பங்குக்கு வெடித்துள்ளாராம். ரொம்ப நாளைக்குப் பிறகு செல்வா படத்தை இயக்கியுள்ளார்.படம் முழுக்க லண்டனிலேயே நடப்பது போல கதையாம். இதனால் முழுப் படத்தையும் லண்டனிலேயேசுட்டுள்ளனர்.படத்தை முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பிய படக் குழுவினர் ஒட்டுமொத்தமாக செய்தியாளர்களைச்சந்தித்து தங்களது படம் குறித்து சிலாகித்தனர்.படத்தின் முக்கிய அம்சமே நம்ம அபர்ணாதான். ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் நடித்துள்ளார் அபர்ணா.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மூலம் அறிமுகமாகிய இந்த லயோலா கல்லூரி கருப்பழகி, இடையில் தமிழில்காணாமல் போய் விட்டார். மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்துப் பார்த்தார்.அதிலும் தேற முடியாததால், நடிப்பை விட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டார். அவரிடம்நெஞ்சில் ஜில் ஜில் கதையைக் கூறி மீண்டும் நடிக்க இழுத்து வந்துள்ளார் செல்வா.அபர்ணாவின் அமர்க்களமான கிளாமர் பிளஸ் நடிப்பு படத்திற்குப் பெரிய பலமாக இருக்கும் என்கிறார்கள்.வெறும் கிளாமர் மட்டும் காட்டாமல் நன்கு நடிக்கவும் செய்துள்ளாராம் அபர்ணா. இந்தப் படம் அபர்ணாவின்நெஞ்சுக்கும் ஜில்லிப்பைக் கொடுக்குமாம்.இமானின் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளதாம். அதிலும் புன்னகை என்று தொடங்கும் பாடலைகருப்பு வெள்ளையில் படம் பிடித்துள்ளார்களாம். காட்சி கருப்பு வெள்ளையாக இருந்தாலும் படு கலர்ஃபுல்லாகபடம் பிடித்துள்ளனராம். நிச்சயம் இந்தப் பாடல் ரசிகர்களை லயிக்க வைக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இமான். ரசிகர்களைஜிலுஜிலுக்க வைக்க வேகமாக வாங்க அபர்ணா!
அபர்ணாவின் அமர்க்களமான கிளாமர் நடிப்பில், முழுக்க முழுக்க லண்டனிலேயே சுடப்பட்டுள்ள நெஞ்சில் ஜில்ஜில், ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகியுள்ளது.
இப்போதெல்லாம் கதையால் ரசிகர்களைக் கவருவதை விட தலைப்பிலேயே ரசிகர்களின் நெஞ்சாங்கூட்டுக்குப்புகுந்து விடுகிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள்.
கனகசபை, மனீஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நவ்தீப், அபர்ணா ஜோடி போட்டுஅசத்தியுள்ளனர்.
வடிவேலுவும் தன் பங்குக்கு வெடித்துள்ளாராம். ரொம்ப நாளைக்குப் பிறகு செல்வா படத்தை இயக்கியுள்ளார்.படம் முழுக்க லண்டனிலேயே நடப்பது போல கதையாம். இதனால் முழுப் படத்தையும் லண்டனிலேயேசுட்டுள்ளனர்.
படத்தின் முக்கிய அம்சமே நம்ம அபர்ணாதான். ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் நடித்துள்ளார் அபர்ணா.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மூலம் அறிமுகமாகிய இந்த லயோலா கல்லூரி கருப்பழகி, இடையில் தமிழில்காணாமல் போய் விட்டார். மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்துப் பார்த்தார்.
அபர்ணாவின் அமர்க்களமான கிளாமர் பிளஸ் நடிப்பு படத்திற்குப் பெரிய பலமாக இருக்கும் என்கிறார்கள்.வெறும் கிளாமர் மட்டும் காட்டாமல் நன்கு நடிக்கவும் செய்துள்ளாராம் அபர்ணா. இந்தப் படம் அபர்ணாவின்நெஞ்சுக்கும் ஜில்லிப்பைக் கொடுக்குமாம்.
இமானின் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளதாம். அதிலும் புன்னகை என்று தொடங்கும் பாடலைகருப்பு வெள்ளையில் படம் பிடித்துள்ளார்களாம். காட்சி கருப்பு வெள்ளையாக இருந்தாலும் படு கலர்ஃபுல்லாகபடம் பிடித்துள்ளனராம்.
நிச்சயம் இந்தப் பாடல் ரசிகர்களை லயிக்க வைக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இமான். ரசிகர்களைஜிலுஜிலுக்க வைக்க வேகமாக வாங்க அபர்ணா!


Click it and Unblock the Notifications











