Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் கடவுள் சூட்டிங்! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலாவின் நான் கடவுள் படத்தின் ஷூட்டிங்வரும் 27ம் தேதி தொடங்குகிறது.பிதாமகனுக்குப் பிறகு மாயாவி என்ற படத்தைத் தயாரித்த பாலா அதன் பின்னர்அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்புவெளியானது. படத்திற்கு நான் கடவுள் என்று பெயர் சூட்டிய பாலா, ஹீரோவாகஅஜீத்தை புக் செய்தார்.ஆனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் அஜீத்துக்கும், பாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகிளம்பியது. இதையடுத்து படத்திலிருந்து விலகிக்கொண்டார் அஜீத்.இதையடுத்து ஆர்யாவை ஹீரோவாக அறிவித்த பாலா, சூட்டோடு சூடாகபடத்திற்கான பூஜையையும் போட்டு முடித்தார். ஷூட்டிங் தொடங்குவதில் மறுபடியும்சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே சரணின் வட்டாரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஆர்யா, அதை விட்டுவிட்டு நான் கடவுளுக்குத் தாவியதால் கடுப்பானசரண், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார். ஆர்யாவைக் கூப்பிட்டு விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும், சரண்படத்தை முடித்துவிட்டுத் தான் பாலா படத்திற்குப்போக வேண்டும் என்றுஉத்தரவிட்டது. இதையடுத்து வேண்டா வெறுப்புடன் சரண் படத்தில் நடித்து வருகிறார்ஆர்யா. இயந்திரத்தனமாக அவர் வட்டாரம் படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள்.வட்டாரம் படப்பிடிப்பு முடியும் கட்டத்தை நெருங்கியுள்ளதால், தனது நான் கடவுள்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் பாலா. இதன் படி 27ம் தேதி ஷூட்டிங்தொடங்குகிறது. சென்னை அருகே உள்ள நசரத்துப் பேட்டை பகுதியில்முதல் கட்டபடப்பிடிப்பை வைத்துள்ளார் பாலா. இங்கு ஆர்யா, பாவனா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படமாக்கவுள்ளார்.இதையடுத்து தென்காசியில் 2வது கட்டப்பிடிப்பு தொடர்கிறது. அதன் பின்னர் தேனிபக்கம் சில காட்சிகளை சுடவுள்ளார் பாலா. காசியிலும் படப்பிடிப்பு நடைபெறும்எனத் தெரிகிறது.
பிதாமகனுக்குப் பிறகு மாயாவி என்ற படத்தைத் தயாரித்த பாலா அதன் பின்னர்அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்புவெளியானது. படத்திற்கு நான் கடவுள் என்று பெயர் சூட்டிய பாலா, ஹீரோவாகஅஜீத்தை புக் செய்தார்.
ஆனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் அஜீத்துக்கும், பாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகிளம்பியது. இதையடுத்து படத்திலிருந்து விலகிக்கொண்டார் அஜீத்.
இதையடுத்து ஆர்யாவை ஹீரோவாக அறிவித்த பாலா, சூட்டோடு சூடாகபடத்திற்கான பூஜையையும் போட்டு முடித்தார். ஷூட்டிங் தொடங்குவதில் மறுபடியும்சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே சரணின் வட்டாரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஆர்யா, அதை விட்டுவிட்டு நான் கடவுளுக்குத் தாவியதால் கடுப்பானசரண், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.
ஆர்யாவைக் கூப்பிட்டு விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும், சரண்படத்தை முடித்துவிட்டுத் தான் பாலா படத்திற்குப்போக வேண்டும் என்றுஉத்தரவிட்டது. இதையடுத்து வேண்டா வெறுப்புடன் சரண் படத்தில் நடித்து வருகிறார்ஆர்யா. இயந்திரத்தனமாக அவர் வட்டாரம் படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள்.
வட்டாரம் படப்பிடிப்பு முடியும் கட்டத்தை நெருங்கியுள்ளதால், தனது நான் கடவுள்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் பாலா. இதன் படி 27ம் தேதி ஷூட்டிங்தொடங்குகிறது. சென்னை அருகே உள்ள நசரத்துப் பேட்டை பகுதியில்முதல் கட்டபடப்பிடிப்பை வைத்துள்ளார் பாலா.
இங்கு ஆர்யா, பாவனா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படமாக்கவுள்ளார்.இதையடுத்து தென்காசியில் 2வது கட்டப்பிடிப்பு தொடர்கிறது. அதன் பின்னர் தேனிபக்கம் சில காட்சிகளை சுடவுள்ளார் பாலா. காசியிலும் படப்பிடிப்பு நடைபெறும்எனத் தெரிகிறது.