twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலா ஷூட்டிங் - 365 நாட்கள் காத்திருந்து திரும்பிய நாயகிகள்...

    By Shankar
    |

    சில விஷயங்களை ஏன் எதற்கு என்று கேட்டாலும் விளக்கம் கிடைக்காது. இயக்குநர் பாலா விவகாரமும் அப்படித்தான்.

    அவர் ஷூட்டிங் வைத்தாலும், வைக்காமல் விட்டாலும், கதையை மாற்றினாலும் காத்திருக்க வைத்தாலும் ஏன் என்று கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

    இதன் விளைவு இரண்டு கதாநாயகிகள் 365 நாட்கள் தேனியில் சும்மாவே உட்கார்ந்திருந்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

    பாலா இப்போது இயக்கி வரும் அவன் இவன் படத்தில் நாயகிகளாக நடித்துள்ளவர்கள் மது ஷாலி்னியும் ஜனனியும். 10 காட்சியில் வரும் அளவுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

    பிறகு சொல்லியனுப்பும்போது வந்தால் போதும் என்று கூறி தேனி ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தார்களாம்.

    அவ்வளவுதான். அதன் பிறகு அவர்களை மறந்தே போனார் பாலா. காரணம், கதை முழுக்க ஹீரோக்களும் வில்லனுமே ஆக்கிரமித்துக்கொள்ள, ஹீரோயின்கள் அவசியப்படவே இல்லையாம்.

    படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைக்கும்போதுதான் சொல்லியனுப்பினார்களாம் ஹீரோயின்களுக்கு.

    இப்பவாவது நினைவு வந்ததே என்ற பெருமூச்சுடன் திரும்பியிருக்கிறார்கள் ஹீரோயின்கள்.

    English summary
    Bala's heroines Madhu Shalini and Janani has been waiting for almost 365 days for the directors call for the shooting. But Bala only called them for the closing day of the shooting!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X