இரண்டாவது மகாத்மா மண்டேலாவா... மகிந்தாவா? - பாலாவின் கிண்டல்

உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில்.
டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்:
"உலகில் இரண்டாம் மகாத்மா எனப்படுவர்... அ) நெல்சன் மண்டேலா ஆ) மகிந்தா ராஜபக்சே" என்று கூறிவிட்டு, எது சரியான விடை என்று கேட்பார்.
மாணவர்கள் சற்று நேரம் யோசித்துவிட்டு, அ) நெல்சன் மண்டேலா என்பார்கள்.
உடனே அந்த ஆசிரியர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, "ஏசப்பா... கோடானுகோடி நன்றிகள் ஏசப்பா... கோடானு கோடி நன்றிகள்", என்பார். கொஞ்சம் விட்டால், மகிந்தாவையும் மகாத்மாவுக்கும் முயற்சி நடப்பதை இத்தனை நாசூக்காக பாலாவால் மட்டும்தான் சொல்ல முடியும்.
அவன் இவன் படம் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் மவுனித்து, ஆர்ப்பரித்த காட்சிகளில் இதுவும் ஒன்று.


Click it and Unblock the Notifications











