Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அகத்தியனின் 'கம்-பேக்'!
காதல் கோட்டை மூலம் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் அகத்தியன். அந்தப் படம் வந்த பிறகு பார்க்காமேல காதல், பேசாமலே காதல், சொல்லாமலே காதல், காதலே இல்லாமல் காதல் என்று விதம் விதமான காதலைச் சொல்லும் படங்களைக் கொடுத்தனர் தமிழ் திரையுலகினர்.
அந்த அளவுக்கு காதல் கோட்டை ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்தது. அதிலும் கமலியாக நடித்த தேவயானிக்கு அந்த கேரக்டர் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. கமலி என்ற பெயரும் பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனது.
பின்னர் விடுகதை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அகத்தியன் இடையில் படங்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அகத்தியன்.
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்தான் இப்படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக அம்முவாகிய நான் பாரதி நடிக்கிறார். கூடவே தர்ஷா, ரோஷிகா, லக்ஷனா என பலரும் உள்ளனர்.
இளைஞர்களுக்கான படம் என்றாலும் இதில் இதயத்ைத தொடும் கருத்துக்களும் அடங்கியிருக்கும் என்கிறார் அகத்தியன்.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும் என்று அடித்துச் சொல்கிறார் அகத்தியன். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் கிளைமாக்ஸ் காட்சி என்றால் சரமாரியாக வில்லனும், ஹீரோவும் அடித்துக் கொள்வார்கள். அடித்து முடித்து விட்டு பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள்.
ஆனால் அகத்தியனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே கிளைமாக்ஸ் படு வித்தியாசமாக இருக்குமாம். அதாவது ஒரு பாடல் மூலம் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்துள்ளாராம் அகத்தியன்.
கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு அந்தக் காட்சி வருகிறதாம். ஒரு பாடலில் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களையும் விளக்குகிறாராம் அகத்தியன்.
கேட்கவே நெஞ்சத்தை அள்ளுதே!