twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவனாவின் முத்த மழை! கிழக்கு கடற்கரைச் சாலைக்காக ஸ்ரீகாந்த் முகத்தில் முத்த மழை பொழிந்து தள்ளியுள்ளார் பாவனா. வெண்திரைக்களம் சார்பில் எஸ்.எஸ். அந்தணன் தயாரிக்கும் படம் கிழக்கு கடற்கரைச்சாலை.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற டப்பா படத்தையும், மெர்க்குரிப் பூக்கள் என்ற அட்டகாசப் படத்தையும்இயக்கிய ஸ்டாண்லி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாவனாவும் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியிலேயே நடந்து வருகிறது. இதற்காக ஒரு பெட்ரோல் பங்க்கையே வாடகைக்குஎடுத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.இப்படத்திற்காக கஞ்சப் பெண்ணே கஞ்சப் பெண்ணே என்ற ஒரு பாடலை சமீபத்தில் படமாக்கினார்கள். பாடலின்ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த்தின் முகத்தில் பாவனாவும், பாவனா முகத்தில் ஸ்ரீகாந்த்தும் மாறி மாறி முத்தமழைபொழிய வேண்டும்.இந்தக் காட்சிக்கு ஸ்ரீகாந்த் ஓ.கே. சொல்லி விட்டார் (கரும்பு தின்னக் கசக்குமா?). ஆனால் பாவனாவிடம் இதைஎப்படிச் சொல்லுவது என்று ஸ்டான்லிக்குக் குழப்பம். ரொம்பத் தயங்கி தயங்கி பாவனாவிடம் காட்சியைவிளக்கினார். அதற்கு பாவனா, அதனால் என்ன, நோ பிராப்ளம் என்று கூறவே சந்தோஷமாகி விட்டார்ஸ்டான்லி.அப்புறம் என்ன சூட்டைக் கிளப்பும் வகையில் படு கூலாக அந்தக் காட்சியை படமாக்கினார் ஸ்டான்லி. படத்தின்பல காட்சிகளில் ஸ்ரீகாந்த்தும், பாவனாவும் ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளார்களாம். இயல்பான காதலர்கள்போல தோன்ற வேண்டும் என்பதால் பாவனாவிடம்முதலிலேயே நன்றாக விளக்கி விட்டுத்தான் நெருக்கமானகாட்சிகளை வைத்தாராம் ஸ்டான்லி.இப்படத்தின் கதை பாவனாவுக்கு ரொம்பப் பிடித்துப் போனதால், ஸ்டான்லியின் விருப்பத்தை தட்டாமல்அத்தனைக் காட்சிகளிலும் நடித்து கொடுத்துள்ளாராம். படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் பேசாமல் கஞ்சாப்பெண்ணே என்று பாட்டை மாற்றிப் போட்டிருக்கலாம் போல.

    By Staff
    |

    கிழக்கு கடற்கரைச் சாலைக்காக ஸ்ரீகாந்த் முகத்தில் முத்த மழை பொழிந்து தள்ளியுள்ளார் பாவனா.

    வெண்திரைக்களம் சார்பில் எஸ்.எஸ். அந்தணன் தயாரிக்கும் படம் கிழக்கு கடற்கரைச்சாலை.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற டப்பா படத்தையும், மெர்க்குரிப் பூக்கள் என்ற அட்டகாசப் படத்தையும்இயக்கிய ஸ்டாண்லி தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாவனாவும் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியிலேயே நடந்து வருகிறது. இதற்காக ஒரு பெட்ரோல் பங்க்கையே வாடகைக்குஎடுத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

    இப்படத்திற்காக கஞ்சப் பெண்ணே கஞ்சப் பெண்ணே என்ற ஒரு பாடலை சமீபத்தில் படமாக்கினார்கள். பாடலின்ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த்தின் முகத்தில் பாவனாவும், பாவனா முகத்தில் ஸ்ரீகாந்த்தும் மாறி மாறி முத்தமழைபொழிய வேண்டும்.

    இந்தக் காட்சிக்கு ஸ்ரீகாந்த் ஓ.கே. சொல்லி விட்டார் (கரும்பு தின்னக் கசக்குமா?). ஆனால் பாவனாவிடம் இதைஎப்படிச் சொல்லுவது என்று ஸ்டான்லிக்குக் குழப்பம். ரொம்பத் தயங்கி தயங்கி பாவனாவிடம் காட்சியைவிளக்கினார். அதற்கு பாவனா, அதனால் என்ன, நோ பிராப்ளம் என்று கூறவே சந்தோஷமாகி விட்டார்ஸ்டான்லி.

    அப்புறம் என்ன சூட்டைக் கிளப்பும் வகையில் படு கூலாக அந்தக் காட்சியை படமாக்கினார் ஸ்டான்லி. படத்தின்பல காட்சிகளில் ஸ்ரீகாந்த்தும், பாவனாவும் ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளார்களாம். இயல்பான காதலர்கள்போல தோன்ற வேண்டும் என்பதால் பாவனாவிடம்முதலிலேயே நன்றாக விளக்கி விட்டுத்தான் நெருக்கமானகாட்சிகளை வைத்தாராம் ஸ்டான்லி.

    இப்படத்தின் கதை பாவனாவுக்கு ரொம்பப் பிடித்துப் போனதால், ஸ்டான்லியின் விருப்பத்தை தட்டாமல்அத்தனைக் காட்சிகளிலும் நடித்து கொடுத்துள்ளாராம். படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் பேசாமல் கஞ்சாப்பெண்ணே என்று பாட்டை மாற்றிப் போட்டிருக்கலாம் போல.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X