Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாகன் ஷூட்டிங்கில் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஸ்ரீகாந்த்!
நடிகர் ஸ்ரீகாந்த் பாகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் தானே நடித்தார். காட்சிப்படி குண்டுவெடிக்கும்போது படக்குழுவினர் கயிற்றின் மூலம் ஸ்ரீகாந்தை அங்கிருந்து தூக்க வேண்டும். ஆனால் குண்டுவெடிக்கும் முன்பே கயிறு அறுந்துவிட்டது. இதை படக்குழுவினர் யாரும் கவனிக்கவில்லை.
ஆனால் ஸ்ரீகாந்த் எப்படியோ குண்டுவெடிக்கும் முன்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு விபத்தை சந்திக்கிறேன். எனக்கும், தீக்கும் அவ்வளவு ராசி. என்னை விபத்து பையன் என்றே அழைக்கலாம்.
குண்டுவெடிக்கும்போது என்னை அங்கிருந்து தூக்க கட்டப்பட்டிருந்த கயிறு குணடு வெடிக்கும் முன்பே அறுந்துவிட்டது. அது படக்குழுவினருக்கு தெரியாது. நான் எப்படியோ அங்கிருந்து வெளியேறவும், குண்டு வெடிக்கவும் கரெக்டாக இருந்தது. குண்டு வெடித்தபோது படக்குழுவினர் என்னை தூக்க கயிற்றைப் பிடித்து இழுக்க முயன்றபோது தான் அவர்களுக்கு கயிறு அறுந்ததே தெரிந்தது.
டூப் ஆர்டிஸ்டகளுக்கும் குடும்பம் உள்ளது. இது போன்ற காட்சிகளால் அவர்களுக்கும் ஆபத்து என்று தெரிந்து தான் நானே நடிக்க தீர்மானித்தேன் என்றார்.