சூட்டிங் ஸ்பாட்
ஆனந்தம் படத் துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி இளம் இயக்குநர் ஒருவரை அறிமுகப்படுத்தியதோடு, ஆனந்தம் படத்தின் கதை ரொம்பநல்லாயிருக்கு, இது இவருடைய சொந்தக் கதையாம் என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அப்போது இடைமறித்த நிருபர்கள் சிலர், அடுத்த ராஜகுமாரனா என்றதும் சிரித்துக் கொண்டே, இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அந்தப்பிரச்சினை இந்தப் படத்திற்குக் கிடையாது. இந்தக் கதை சகோதரர்களுடைய பாசத்தினை மையமாகக் கொண்டது என்றார்.
புதியவர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புது வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுப்பவர் ஆர்.பி.செளத்ரி. அதே சமயத்தில் சில நேரங்களில் தனது கையையும்சுட்டுக் கொள்பவர் (உன்னைக் கொடு என்னைத் தருவேன்) இந்த வெள்ளை மனதுக்காரர்!.
Comments


Click it and Unblock the Notifications