Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தொடர்ந்து 40 மணி நேரமாக சண்டை போடும் விஜய்..'தெறி'க்காக
சென்னை: தெறி படத்திற்கான அதிரடி சண்டைக் காட்சி ஒன்றை தொடர்ந்து 40 மணி நேரங்களாக இயக்குநர் அட்லீ படம் பிடித்து வருகிறாராம்.
ராஜா ராணி படத்தின் மூலம் புகழ்பெற்ற அட்லீ தற்போது விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து விட அட்லீ திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக சில வாரங்களுக்கு தமிழ்த் திரையுலகமே ஒட்டுமொத்தமாக முடங்கியது.
மழையால் ஏற்பட்ட இந்த தாமதத்தை சரி செய்யும் நோக்கில் தற்போது தெறி படத்தின் சண்டைக் காட்சிகளை இரவுபகலாக எடுத்து வருகிறார் அட்லீ.
தற்போது தெறி படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் மேற்பார்வையில் அட்லீ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
Posted by George C. Williams on Monday, December 21, 2015
இதற்காக தொடர்ந்து 40 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் அட்லீ. இந்தத் தகவலை அட்லீ மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளார் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.