Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குளச்சல் கடலில் தத்தளித்த படகு... கடலில் கவிழ்ந்த தனுஷ்,அப்புக்குட்டி
இப்போதுதான் கடல் என்ற படத்தை எடுத்து ஒய்ந்தார் மணிரத்தினம். படமும் தியேட்டர்களை விட்டு வெகு வேகமாக வெளியேறி விட்டது. இந்த நிலையில் மீனவர் வேடத்தில் தனுஷ் நடித்து வரும் படம்தான் மரியான்.
பரத்பாலா இயக்குகிறார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்காக, கடலுக்குள் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் பரத்பாலா.
அதன்படி ஒரு படகில் தனுஷ், அப்புக்குட்டி இருவரையும் அமர்த்தி கடலுக்குள் சென்று படமாக்கினார். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த படகு தீடிரென வீசிய பலத்த காற்றால் தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் காப்பாற்றினார். இரு நடிகர்களுக்கும் காயம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.