twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட்டில் மிஸ் கொல்கத்தா ஊதினால் பறந்து விடும் கொடி இடையாள்கள் மும்பையில் இருந்தும் சிக் என்ற கட்டுடல்களுடன் கேரளா பக்கம் இருந்து அழகிகளும்பறந்து வந்து தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும் நிலையில் ஒரு சேஞ்சுக்காக கொல்கத்தாவில் இருந்து குட்டி குஷ்பு மாதிரி புஷ்டியாகஒரு ஹீரோயின் வந்திறங்கியிருக்கிறார்.அவரது பெயர் தேபஸ்ரீ.சித்திரப்பாவை என்ற அழகிய பெயரில் உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார் இவர். இந்த தேபஸ்ரீ மிஸ்கொல்கத்தா பட்டம் வென்றவராம். (எப்போ?).சிவக்குமார், பார்த்திபன் என இரு ஹீராக்கள் அறிமுகமாகும் இந்தப் படத்தை இயக்குவது தாஸ் என்ற புதுமுகம். பச்சை அம்மன்கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.ஏவிஎம் ஸ்டுடியோவில் பல லட்சத்தில் செட்போட்டு சமீபத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்தார்கள். கனத்த சாரீரத்தை வைத்திருந்தாலும்தேபஸ்ரீ சளைக்காமல் கும்.. கும் ஆட்டம் போட்டார்.ஒரு பெண்ணை நோக்கி அவளது அண்ணனின் நண்பனே காதல் அம்பு வீசும்போது உண்டாகும் பிரச்சனைகளை மையமாக வைத்துபடத்தை எடுக்கிறார்களாம்.நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்கனும், தமிழில் முன்னணி ஹீரோயின் ஆகனும் என்ற ஆசையை வெளிப்படும் தேபஸ்ரீக்கு தமிழ் என்றவார்த்தையைத் தவிர தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாது. இது போதுமே தமிழில் சான்ஸ்களைப் பிடிக்க.மிஸ் கொல்கத்தா பட்டம் வென்ற கையோடு வங்க மொழியில் நடிக்க சான்ஸ் வந்ததாம். ஆனால், இந்தி அல்லது தமிழில் தான் அறிமுகமாகவேண்டும் என்று தணியாத ஆர்வத்துடன் காத்திருந்தாராம் தேபஸ்ரீ.இப்போது தமிழில் நுழைந்திருக்கிறாராம். தமிழில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு அடுத்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்குப் போகஆசையும்.தேபஸ்ரீயின் ஆசை கொஞ்சம் ஓவரா தெரியல?இந்தப் படத்தை எடுத்துக் கொண்டே "காதலெனும் தேர்வெழுதி என்ற இரண்டாவது படத்தையும் தயாரிக்கிறது பச்சை அம்மன்கிரியேசன்ஸ். அதை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது இன்னொரு புதுமுகமான ஜெ.எஸ்.குணா.இந்தப் படத்திலும் சான்ஸ் பிடிக்க தேபஸ்ரீ முயற்சித்து வருவதாய் சொல்கிறார்கள்.

    By Staff
    |

    ஊதினால் பறந்து விடும் கொடி இடையாள்கள் மும்பையில் இருந்தும் சிக் என்ற கட்டுடல்களுடன் கேரளா பக்கம் இருந்து அழகிகளும்பறந்து வந்து தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும் நிலையில் ஒரு சேஞ்சுக்காக கொல்கத்தாவில் இருந்து குட்டி குஷ்பு மாதிரி புஷ்டியாகஒரு ஹீரோயின் வந்திறங்கியிருக்கிறார்.

    அவரது பெயர் தேபஸ்ரீ.

    சித்திரப்பாவை என்ற அழகிய பெயரில் உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார் இவர். இந்த தேபஸ்ரீ மிஸ்கொல்கத்தா பட்டம் வென்றவராம். (எப்போ?).

    சிவக்குமார், பார்த்திபன் என இரு ஹீராக்கள் அறிமுகமாகும் இந்தப் படத்தை இயக்குவது தாஸ் என்ற புதுமுகம். பச்சை அம்மன்கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.


    ஏவிஎம் ஸ்டுடியோவில் பல லட்சத்தில் செட்போட்டு சமீபத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்தார்கள். கனத்த சாரீரத்தை வைத்திருந்தாலும்தேபஸ்ரீ சளைக்காமல் கும்.. கும் ஆட்டம் போட்டார்.

    ஒரு பெண்ணை நோக்கி அவளது அண்ணனின் நண்பனே காதல் அம்பு வீசும்போது உண்டாகும் பிரச்சனைகளை மையமாக வைத்துபடத்தை எடுக்கிறார்களாம்.

    நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்கனும், தமிழில் முன்னணி ஹீரோயின் ஆகனும் என்ற ஆசையை வெளிப்படும் தேபஸ்ரீக்கு தமிழ் என்றவார்த்தையைத் தவிர தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாது. இது போதுமே தமிழில் சான்ஸ்களைப் பிடிக்க.

    மிஸ் கொல்கத்தா பட்டம் வென்ற கையோடு வங்க மொழியில் நடிக்க சான்ஸ் வந்ததாம். ஆனால், இந்தி அல்லது தமிழில் தான் அறிமுகமாகவேண்டும் என்று தணியாத ஆர்வத்துடன் காத்திருந்தாராம் தேபஸ்ரீ.


    இப்போது தமிழில் நுழைந்திருக்கிறாராம். தமிழில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு அடுத்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்குப் போகஆசையும்.

    தேபஸ்ரீயின் ஆசை கொஞ்சம் ஓவரா தெரியல?

    இந்தப் படத்தை எடுத்துக் கொண்டே "காதலெனும் தேர்வெழுதி என்ற இரண்டாவது படத்தையும் தயாரிக்கிறது பச்சை அம்மன்கிரியேசன்ஸ். அதை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போவது இன்னொரு புதுமுகமான ஜெ.எஸ்.குணா.

    இந்தப் படத்திலும் சான்ஸ் பிடிக்க தேபஸ்ரீ முயற்சித்து வருவதாய் சொல்கிறார்கள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X