twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சிருக்கும் வரை தீபா! எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும் நெஞ்சிருக்கும் வரை படம் மூலம்அறிமுகமாகும் தீபா, சண்டீகர் அழகி என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அப்படிஒரு அச்சு அசல் தென்னிந்திய சாயல் இந்த கலகல அழகியிடம். பஞ்சாபிலிருந்து தமிழுக்கு வந்த வெற்றிக் கொடி கட்டி கோடிகளை அள்ளிச் சென்றரதி, சிம்ரன், சோனியா அகர்வால் வரிசையில் சேருகிறார் தீபா. படு பளிச்செனஇருக்கும் தீபாவின் கண்கள் படு அழகு.கண்களில் மயங்கித் தான் இவரை தனது நெஞ்சிருக்கும் வரை படத்தின்நாயகியாக்கினாராம் எஸ்.ஏ.சி. தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் தீபாவின் புகழைப்பாடி வருகிறாராம். நல்ல அழகு, பாந்தமான முகம், அருமையான நடிப்பு, பெரியரவுண்டு வருவாருப்பா என்று புளகாங்கிதம் அடைந்து கூறுகிறார் எஸ்.ஏ.சி. அவர் சொல்வது மிகையில்லை என்பது தீபாவைப் பார்த்தாலே தெரிகிறது. அப்படிஒரு வாளிப்பான முகம். பெத்த ரவுண்டு வருவதற்கேற்ற அத்தனை தகுதிகளும்,சிறப்பம்சங்களும் எக்ஸ்ட்ரா எக்ஸ்டாராவாகவே இருக்கிறது.இவருக்கு இது முதல் படம் இல்லை. ஏற்கனவே தெலுங்கில் மாயாஜாலம் என்றபடத்தில் நடித்துள்ளார். இப்போது தமிழில் நெஞ்சிருக்கும் வரை மூலம் அறிமுகமாகிதமிழ் ரசிகர்களின் நெஞ்சாங்கூட்டை நிரப்ப வருகிறார்.தீபாவின் பெருமைகளை கேள்விப்பட்டதுமே ஏகப்பட்ட முதலாளிகள் பணப்பொட்டியுடன் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் தலையைக் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.இவரை விஜய்யுடனும் ஜோடி சேர்க்க ஒரு முயற்சி நடிக்கிறது.விஜய்யுடன் ஜோடி போடும் அளவுக்கு, அதுவும் முதல் படம் முடியும் முன்பே அந்தவாய்ப்பு வருவது குறித்து தீபாவுக்கு ரொம்ப சந்தோஷம். எல்லாப் புகழும்எஸ்.ஏ.சிக்கு என்று அவர் இருக்கும் திசை நோக்கி பெரிய கும்பிடு போடுகிறார்.பொழச்சுக்குவார்...

    By Staff
    |

    எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும் நெஞ்சிருக்கும் வரை படம் மூலம்அறிமுகமாகும் தீபா, சண்டீகர் அழகி என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அப்படிஒரு அச்சு அசல் தென்னிந்திய சாயல் இந்த கலகல அழகியிடம்.

    பஞ்சாபிலிருந்து தமிழுக்கு வந்த வெற்றிக் கொடி கட்டி கோடிகளை அள்ளிச் சென்றரதி, சிம்ரன், சோனியா அகர்வால் வரிசையில் சேருகிறார் தீபா. படு பளிச்செனஇருக்கும் தீபாவின் கண்கள் படு அழகு.

    கண்களில் மயங்கித் தான் இவரை தனது நெஞ்சிருக்கும் வரை படத்தின்நாயகியாக்கினாராம் எஸ்.ஏ.சி. தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் தீபாவின் புகழைப்பாடி வருகிறாராம். நல்ல அழகு, பாந்தமான முகம், அருமையான நடிப்பு, பெரியரவுண்டு வருவாருப்பா என்று புளகாங்கிதம் அடைந்து கூறுகிறார் எஸ்.ஏ.சி.

    அவர் சொல்வது மிகையில்லை என்பது தீபாவைப் பார்த்தாலே தெரிகிறது. அப்படிஒரு வாளிப்பான முகம். பெத்த ரவுண்டு வருவதற்கேற்ற அத்தனை தகுதிகளும்,சிறப்பம்சங்களும் எக்ஸ்ட்ரா எக்ஸ்டாராவாகவே இருக்கிறது.

    இவருக்கு இது முதல் படம் இல்லை. ஏற்கனவே தெலுங்கில் மாயாஜாலம் என்றபடத்தில் நடித்துள்ளார். இப்போது தமிழில் நெஞ்சிருக்கும் வரை மூலம் அறிமுகமாகிதமிழ் ரசிகர்களின் நெஞ்சாங்கூட்டை நிரப்ப வருகிறார்.

    தீபாவின் பெருமைகளை கேள்விப்பட்டதுமே ஏகப்பட்ட முதலாளிகள் பணப்பொட்டியுடன் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் தலையைக் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.இவரை விஜய்யுடனும் ஜோடி சேர்க்க ஒரு முயற்சி நடிக்கிறது.

    விஜய்யுடன் ஜோடி போடும் அளவுக்கு, அதுவும் முதல் படம் முடியும் முன்பே அந்தவாய்ப்பு வருவது குறித்து தீபாவுக்கு ரொம்ப சந்தோஷம். எல்லாப் புகழும்எஸ்.ஏ.சிக்கு என்று அவர் இருக்கும் திசை நோக்கி பெரிய கும்பிடு போடுகிறார்.

    பொழச்சுக்குவார்...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X