Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமாவில் நடித்த தேவாரம் !
தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற வால்டேர் தேவாரம், சத்யராஜ் நடிக்கும் இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் ஒரு காட்சியில்நடித்துள்ளார்.
வீரப்பனைப் பிடிக்காமல் ஓய மாட்டேன் என்று படு தீவிரமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனுக்கும், தேவாரம் பெயரைக்கேட்டாலே கடும் கோபம் வரும். அந்த அளவுக்கு வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தேவாரம்.
படு ஸ்ட்ரிக்டான அதிகாரியான தேவாரம் கடைசியில் வீரப்பனைப் பிடிக்க முடியாமலேயே ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும்கூட அவரை ஜெயலலிதா, வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினார். இருப்பினும் அந்த பாக்கியம், தேவாரத்தின் சிஷ்யர்விஜயக்குமாருக்குத்தான் கிடைத்தது.
இப்போது ஓய்வு வாழ்க்கையை மேற்கொண்டு வரும் தேவாரம், பயங்கரமான விளையாட்டுப் பிரியர். பல்வேறு விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இங்கிலீஷ்காரன் படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதாவது நாயகியான நமீதா, ஓட்டப் பந்தய வீராங்கனை.மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெறுகிறார். பரிசளிப்பு விழாவில் முக்கியப்பிரமுகரிடமிருந்து அவர் பரிசைப் பெறுகிறார்.
பரிசைத் தரும் முக்கியப் பிரமுகராக யாராவது நிஜமான முக்கியப் பிரமுகரையே நடிக்க வைத்தால் என்ன என்று இயக்குநர் ஷக்திசிதம்பரம் யோசித்துள்ளார்.அப்போது தேவாரத்தின் பெயரை சத்யராஜ் பரிந்துரைத்துள்ளார். நல்ல ஐடியா என்று கூறி ஷக்திசிதம்பரமும், தயாரிப்பாளர் அமுதா துரைராஜும் தேவாரத்தை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டனர்.
முதலில் தேவாரம் தயங்கியுள்ளார். பின்னர் படத்தின் கதையைக் கூறி அவரது சம்மதத்தைப் பெற்றனர். பின்னர் தேவாரமே, புனிதஜோசப் கல்லூரி மைதானத்தில் இக்காட்சியை எடுக்கலாம் என்று கூறி அவரே அனுமதியையும் வாங்கித் தந்தாராம்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது தேவராம் பெர்பக்டாக நடித்தார் என்று ஷக்தி சிதம்பரம் கூறினார். காட்சிபடமாக்கப்பட்டபோது உடன் இருந்த, வால்டேர் வெற்றிவேல் சத்யராஜை, ஒரிஜினல் வால்டேர் தேவாரம் பாராட்டினாராம்.
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!