மரியான் ஷூட்டிங்கில் தனுஷுக்கும் எனக்கும் சண்டை வந்தது உண்மைதான்!- பரத்பாலா

இன்று சென்னையில் மீடியா செய்தியாளர்களைச் சந்தித்தனர் மரியான் படக்குழுவினர். அப்போது, படப்பிடிப்பில் உங்களுக்கும் தனுஷுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகினவே, உண்மைதானா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பரத்பாலா, "ஒரு படைப்பு என வரும்போது, அதில் பங்கேற்கிற படைப்பாளிகளுக்குள் பல கருத்து பேதங்கள் வருவது இயற்கை. அது அந்த படைப்பை மேலும் மெருகேற்ற உதவும்.
எனக்கும் தனுஷுக்கும் இடையே எழுந்த பிரச்சினையை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சண்டை என்று பார்க்க வேண்டியதில்லை. தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். அவருக்குள் நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதன் விளைவு, ஒரு விஷயத்தை மாறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்," என்றார்.
ஆப்பிரிக்க கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் தமிழ் மீனவ இளைஞனின் கதைதான் இந்த மரியான். நாளை வெளியாகிறது.
Comments


Click it and Unblock the Notifications