Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பளார் விட்ட இயக்குநர்... கதறிய நடிகை... கொதிக்கும் மகளிர்!
'பூமணி', 'பூந்தோட்டம்' போன்ற படங்களை இயக்கியவர் இந்த களஞ்சியம். இப்போது 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். சீனிவாசன் என்பவர் ஹீரோவாம். அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா ஆகிய 3 ஹீரோயின்கள் இந்தப் படத்தில்.
இதில் புது முக நடிகை அஸ்மிதா, படப்பிடிப்பில் சரியாக உணர்ச்சியைக் காட்டவில்லை என்று கன்னத்தில் பளார் விட்டாராம் களஞ்சியம்.
அதிர்ச்சியடைந்த அஸ்மிதா, ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து கதறிக் கதறி அழுதாராம்.
இதற்காக ஒரு பிரஸ்மீட் வைத்த களஞ்சியம், அஸ்மிதாவைக் காட்டி, "படம் நன்றாக வரவேண்டுமே, அந்த கேரக்டர் கெட்டுவிடக் கூடாதே என்ற வேகத்தில் சைக்கோ போல நடந்து கொள்ள வேண்டிய சூழல். அஸ்மிதாவை கன்னத்தில் அடித்து, திட்டியதெல்லாம் உண்மைதான். ஆனால் அது அவரது நல்லதுக்குதான்", என்று பில்டப் கொடுத்தார் பாரதிராஜா ரேஞ்சுக்கு.
இது குறித்து அஸ்மிதா கூறுகையில், "முதலில் சிரிப்பு.. அடுத்த ஷாட்டிலேயே அழுகை என மாற்றி மாற்றி நடிக்கச் சொன்னார். என்னால் முடியவில்லை. உடனே கத்தியபடி கன்னத்தில் அறைந்துவிட்டார். எனக்கு அவமானம் தாங்கவில்லை. தேம்பித் தேம்பி அழுதேன். ஆனால் கொஞ்சநேரத்தில் அதை மறந்து விட்டேன்.
இப்போது அதை வைத்து பரபரப்பு கிளப்புகிறார்கள்," என்றார்.
ஆனால் பரபரப்பு கிளப்புபவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல. மகளிர் அமைப்புகள். அதெப்படி ஒரு பெண்ணை சம்பந்தமில்லாத ஒரு ஆண் கைநீட்டி அறையலாம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்ற கோஷத்துடன் கிளம்பியுள்ளனர்.
பொதுமக்கள் பணத்தை மோசடி செய்ததாக திருவண்ணாமலை போலீசார் ஏற்கெனவே களஞ்சியம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் இருக்கும் களஞ்சியத்துக்கு, இன்னொரு வழக்கைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி!
ஏற்கெனவே பத்மப்ரியாவை அறைந்த விவகாரத்தில் இயக்குநர் சாமி பட்ட பாடு நினைவிருக்கலாம்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
அஜித் - ஷாலினி 24ஆவது திருமண நாள்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வாழ்த்து
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?