Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மழை: நட்டாற்றில் ஷூட்டிங்குகள்!
Click here for more images |
தொடர் மழை காரணமாக திரிஷா, வடிவேலு, நயனதாரா ஆகியோர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளனவாம்.
தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த வரிசையில் இப்போது சினிமாக்காரர்களும் சேர்ந்துள்ளனர்.
தனுஷ், நயனதாரா நடித்து வரும் படம் யாரடி நீ மோகினி. இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடித்து விளாசி வரும் மழையால் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஷூட்டிங்குக்கு பேக்கப் சொல்லி விட்டு சென்னைக்குத் திரும்பி விடலாமா என இயக்குநர் ஜவஹர் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
இப்படத்தை தனுஷின் அண்ணனான செல்வராகவன் தயாரிக்கிறார். அவருடைய அசோசியேட்தான் ஜவஹர் என்பது நினைவிருக்கலாம்.
இதேபோல அபியும், நானும் படமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்குக்காக பிரகாஷ் ராஜ், திரிஷா உள்ளிட்டோர் மூணாறு பக்கம் முகாமிட்டுள்ளனர்.
அங்கும் மழை வெளுத்து வாங்குவதால் வெளியில் தலை காட்ட முடியாமல் ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே அத்தனை பேரும் முடங்கிக் கிடக்கிறார்களாம். மழை எப்போது விடும், ஷூட்டிங்கை எப்போது ஆரம்பிக்கலாம் என்ற கவலையில் உள்ளாராம் பிரகாஷ் ராஜ். காரணம், இவர்தான் படத்தின் தயாரிப்பாளர்.
இதேபோல மழையால் பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். வடிவேலு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 3 வித்தியாசமான கெட்டப்களில் நாயகனாக நடிக்கும் படம் இது. ஷ்ரியாவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஒசத்தியான ஒரு ஆட்டத்தையும் போட்டுள்ளார் வடிவேலு.
இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
மழை விட்டால்தான் இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் தொடருமாம். இல்லாவிட்டால் பேக்கப் சொல்லி விட்டு சென்னைக்குத் திரும்பும் ஐடியாவில் 3 படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் உள்ளனர்
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!