Just In
- 25 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 1 hr ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Sports
இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!
- Education
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வரலட்சுமி பட ஷூட்டிங்கில் தீ விபத்து... 5 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பலி!

சென்னை: வரலட்சுமி பட படப்பிடிப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.
வரலட்சுமி நடித்துள்ள நீயா 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வெல்வட் நகரம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

வி.சமுத்ரா இயக்கும் ரணம் எனும் கன்னட படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரி வேடம் ஏற்றுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா!
ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
சிலிண்டர் வெடித்து சிதறியதில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.