விக்ராந்தை அறைந்த நடிகை! விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் நடிக்கும் முதல் கனவே படத்தில், கன்னத்தில்அறைவது போன்ற காட்சியில் நிஜமாகவே விக்ராந்த்தை ஹீரோயின் ஹனி ரோஸ்அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோலிவுட்டில் இப்போதெல்லாம் இயக்குனர், துணை நடிகையை அறைவது,ஹீரோயினை இயக்குனர் அறைவது என்ற ஒரே அறை மயமாக உள்ளது.துணை நடிகை ஒருவரை இயக்குனர் சேரன் அறைந்ததாக சர்ச்சை எழுந்தது.அதேபோல, நாகர்கோவில் நடிகை சரிதா தாஸுக்கு இயக்குனர் கையால் பளார்கிடைத்தது.இப்போது இன்னொரு அறை சமாச்சாரம் கோலிவுட்டை கலக்கியுள்ளது. விக்ராந்த், ஹனிரோஸ் (இவரும் கேரள வரவு தான்) நடிக்கும் முதல்கனவே படத்தின்ஷூட்டிங் நாகர்கோவிலில் நடந்தது.காட்சிப்படி, விக்ராந்த் கன்னத்தில் ஹனிரோஸ் அறைய வேண்டும்.பளார் என ஒரு பலமான அறை கொடுக்கும்படி இயக்குனர் பாலமுருகன் சொல்லிவிட்டு ஆக்ஷன் என்றார். பலமுறை டேக் எடுத்தும் சரியாக அறை விழவில்லை.இதனால் இயக்குனர் அப்செட் ஆனார்.அதைப் பார்த்த ஹனி ரோஸ், ஒரே ஒரு டேக் கொடுங்க சார், சரியா செய்றேன்என்றார்.சரி என்று டேக் போனார்கள். இந்த முறை விக்ராந்த் கன்னத்தில் விழுந்ததுபயங்கரமான பளார். கண்கள் கலங்க நின்றார் விக்ராந்த். கட் என்றுசொன்னஇயக்குனர் விக்ராந்த்திடம் சென்று என்னாச்சு என்றார்.நிஜமாவே அறைந்து விடடார் சார் என்றார் விக்ராந்த்.இதுகுறிதது ஹனியிடம்கேட்டபோது, ஏற்கனவே சில இயக்குனர்கள் நடிகைகளைஅறைந்தது குறித்து செய்திகள் படித்தேன். அதனால்தான் எங்கே நாம் சரியாகசெய்யாவிட்டால் நமக்கும் அறை விழுமோ என்ற பயத்தில் தான் விக்ராந்த்தைநிஜமாகவே அறைந்துவிட்டேன் என்றார்.நல்ல கதையா இருக்கே!
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் நடிக்கும் முதல் கனவே படத்தில், கன்னத்தில்அறைவது போன்ற காட்சியில் நிஜமாகவே விக்ராந்த்தை ஹீரோயின் ஹனி ரோஸ்அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோலிவுட்டில் இப்போதெல்லாம் இயக்குனர், துணை நடிகையை அறைவது,ஹீரோயினை இயக்குனர் அறைவது என்ற ஒரே அறை மயமாக உள்ளது.துணை நடிகை ஒருவரை இயக்குனர் சேரன் அறைந்ததாக சர்ச்சை எழுந்தது.அதேபோல, நாகர்கோவில் நடிகை சரிதா தாஸுக்கு இயக்குனர் கையால் பளார்கிடைத்தது.
இப்போது இன்னொரு அறை சமாச்சாரம் கோலிவுட்டை கலக்கியுள்ளது.
விக்ராந்த், ஹனிரோஸ் (இவரும் கேரள வரவு தான்) நடிக்கும் முதல்கனவே படத்தின்ஷூட்டிங் நாகர்கோவிலில் நடந்தது.
காட்சிப்படி, விக்ராந்த் கன்னத்தில் ஹனிரோஸ் அறைய வேண்டும்.
பளார் என ஒரு பலமான அறை கொடுக்கும்படி இயக்குனர் பாலமுருகன் சொல்லிவிட்டு ஆக்ஷன் என்றார். பலமுறை டேக் எடுத்தும் சரியாக அறை விழவில்லை.இதனால் இயக்குனர் அப்செட் ஆனார்.அதைப் பார்த்த ஹனி ரோஸ், ஒரே ஒரு டேக் கொடுங்க சார், சரியா செய்றேன்என்றார்.
சரி என்று டேக் போனார்கள். இந்த முறை விக்ராந்த் கன்னத்தில் விழுந்ததுபயங்கரமான பளார். கண்கள் கலங்க நின்றார் விக்ராந்த். கட் என்றுசொன்னஇயக்குனர் விக்ராந்த்திடம் சென்று என்னாச்சு என்றார்.
நிஜமாவே அறைந்து விடடார் சார் என்றார் விக்ராந்த்.
இதுகுறிதது ஹனியிடம்கேட்டபோது, ஏற்கனவே சில இயக்குனர்கள் நடிகைகளைஅறைந்தது குறித்து செய்திகள் படித்தேன். அதனால்தான் எங்கே நாம் சரியாகசெய்யாவிட்டால் நமக்கும் அறை விழுமோ என்ற பயத்தில் தான் விக்ராந்த்தை
நிஜமாகவே அறைந்துவிட்டேன் என்றார்.நல்ல கதையா இருக்கே!


Click it and Unblock the Notifications