பச்சைக்குடை... சம்பளம் வாங்காமல் இசையமைத்த இளையராஜா!

நித்யா தாஸ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் செல்வராஜ். பல்வேறு உலகப் பட விழாக்களில் பங்கேற்க வைக்கும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் கால காலமாக தெய்வமாய்ப் போற்றி வணங்கும் காடுகளையும் மரங்களையும், நகரத்து மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக அழிக்கப்பார்ப்பதும், அதை ஒரு பழங்குடிப் பெண்ணும் அவர் சகோதரரும் தடுத்துக் காப்பதும்தான் கதை.
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். செல்வராஜின் நீண்ட கால நண்பர் ராஜா. அதுமட்டுமல்ல, படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல விஷயத்தை பெரும் சவால்களுக்கிடையே எடுத்திருக்கிறீர்கல். இதற்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி அற்புதமாக பின்னணி இசை அமைத்துத் தந்துள்ளாராம்.
இந்தப் படத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு திரையிட்டுக் காட்ட செல்வராஜ் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











