Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷூட்டிங் ஸ்டார்ட்.. 4 மாதத்துக்கு பின் மேக்கப் போட்ட பிரபல ஹீரோ.. அற்புதமாக உணர்ந்ததாக நெகிழ்ச்சி!
ஐதராபாத்: நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு தனது படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறார் பிரபல ஹீரோ.
பிரபல கன்னட நடிகர் சுதீப். தமிழில், நான் ஈ, சிம்புதேவன் இயக்கிய புலி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்திருக்கிறார்.
என்னது நான் அந்த 'கிரேடு' நடிகையா..? பிரபல ஹீரோயின் கங்கனா ரனவத்தை அப்படிக் கலாய்த்த டாப்ஸி!
ஸ்ரத்தா தாஸ்
இந்தியில் சல்மான் கானின், தபாங் 3 படத்தில் இவர் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. அடுத்து கோட்டிகோப்பா 3 என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இதில் மடோனா செபஸ்டின், ஸ்ரத்தா தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சிவகார்த்திக் இயக்கும் இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது.
கடுமையான பயிற்சி
இதையடுத்து சுதீப் இப்போது, கன்னடத்தில் உருவாகும் பான்டோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக உடலை இறுக்கி, முறுக்கி வைத்திருக்கிறார். படத்தில் சிக்ஸ்பேக்கில் வருகிறார் அவர். இதற்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த ஒர்க் அவுட் புகைப்படங்கள் வைரலாயின.
4 மாத இடைவெளி
இதன் ஷூட்டிங்கும் கொரோனா லாக்டவுனால் தடைபட்டிருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பை தொடங்க சில மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இருந்தும் பெரிய படங்கள் எதுவும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்நிலையில் நடிகர் சுதீப், நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 'பான்டோம்' படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார்.
அற்புதமாக உணர்ந்தேன்
அங்குள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. துபற்றி அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சுதீப், நீண்ட இடைவெளிக்குப் பின் என் முகத்தில் மேக்கப் போட்டதும் அற்புதமாக உணர்ந்தேன். என் passion -ல் இருந்து கொஞ்சம் விலகி நீண்ட விடுமுறையில் இருந்ததுபோல் உணர்ந்தேன். அந்த passion-க்கு சினிமா என்று பெயர். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.