கரீஷ்மா.. மும்முனை தாக்குதல் பளிச்சிடும் பாதாம் கீரமாக படு குளிர்ச்சியாக இருக்கிறார் கரீஷ்மா.லயாவில் இந்த குளிர் நாயகி நிடிக்கிறார். கூட நடிப்பது அமிர்தம் பட நாயகன்கணேஷ்.படத்தை இயக்குவது ரிஷிராஜ். இவர் லயாவுக்கு முன்பு வைரவன் என்ற படத்தைஇயக்கிய பேரனுபவம் பெற்றவர். அந்தப் படம் வெளிவரவே இல்லை என்றாலும்,அதில் கரீஷ்மா காட்டி கிளுகிளுப்பு ஸ்டில்களாக பத்திரிகைகளை நிறைத்தது.இப்போ லயா படத்தின் கதையிலும் கரீஷ்மாவுக்கே அதாவது நாயகிக்கேமுக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் ரிஷிராஜ். ஸோ, இதிலும் கரீஷ்மா மிககலகலப்பாக காட்டப்படுகிறார்.இந்தப் படமு தனது கிளாமர் தூணை நம்பியே கட்டப்படுவதால் கரீஷ்மாவும்வேண்டிய அளவுக்கு கலவையை அள்ளித் தெளித்து வருகிறார்.கரீஷ்மாவின் கவர்ச்சி மட்டும் போதாதென்று வயசுப் பசங்க பட நாயகி பாரதியும்இந்தப் படத்தில் பப்பளத்துள்ளார்.இந்த இருவரும் கூட பத்தாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில்ரேகாஸ்ரீயையும் கூட சேர்ந்து குத்துப் பாட்டுக்கு கொத்த வைத்துள்ளார்.ஏற்கனவே இந்த ரேகாஸ்ரீ ஆடுபுலி ஆட்டத்தில் படு அமர்க்களமான ஆடியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.இப்படி மும்முனைத் தாக்குதலுடன் கூடிய இப்படத்தில் ரிஷிராஜும் தலையைக்காட்டியுள்ளாராம். படத்தில் அவருக்கும் முக்கிய வேடமாம். கதை என்னவோகண்ணாளா என்று ரிஷிராஜிடம் கேட்டோம்.இந்தக் காலத்து வாலிபப் பசங்க படிக்கிற வயதில் பல தவறான வழிகளுக்குப் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வழி காட்டுவதே இந்தப் படத்தின்கதை என்று ரொம்ப உருக்கமாகப் பேசினார்.சமீபத்தில் இப்படத்திற்காக ஆத்து மணல் எடுத்து என்ற ஒரு பாட்டைசுட்டிருக்கிறார்களாம். என்ன விசேஷம் என்றால், படப்பிடிப்பு முடிந்து, பூசணிக்காய்உடைத்த பின்னர் எடுக்கப்பட்ட பாடலாம் இது. வழக்கமாக பூசணிக்காய் உடைத்துவிட்டால் படம் அவ்ளோதான் (அதாவது ஷூட்டிங் முடிந்தது!) என்று அர்த்தம்.ஆனால் மரபை உடைத்து அந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள் என்றால் பாடலுக்குஆர்.கே.சுந்தர் போட்டுத் தந்துள்ள இசைதான் காரணம் என்கிறார் ரிஷிராஜ்.

By Staff
பளிச்சிடும் பாதாம் கீரமாக படு குளிர்ச்சியாக இருக்கிறார் கரீஷ்மா.

லயாவில் இந்த குளிர் நாயகி நிடிக்கிறார். கூட நடிப்பது அமிர்தம் பட நாயகன்கணேஷ்.

படத்தை இயக்குவது ரிஷிராஜ். இவர் லயாவுக்கு முன்பு வைரவன் என்ற படத்தைஇயக்கிய பேரனுபவம் பெற்றவர். அந்தப் படம் வெளிவரவே இல்லை என்றாலும்,அதில் கரீஷ்மா காட்டி கிளுகிளுப்பு ஸ்டில்களாக பத்திரிகைகளை நிறைத்தது.

இப்போ லயா படத்தின் கதையிலும் கரீஷ்மாவுக்கே அதாவது நாயகிக்கேமுக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் ரிஷிராஜ். ஸோ, இதிலும் கரீஷ்மா மிககலகலப்பாக காட்டப்படுகிறார்.

இந்தப் படமு தனது கிளாமர் தூணை நம்பியே கட்டப்படுவதால் கரீஷ்மாவும்வேண்டிய அளவுக்கு கலவையை அள்ளித் தெளித்து வருகிறார்.

கரீஷ்மாவின் கவர்ச்சி மட்டும் போதாதென்று வயசுப் பசங்க பட நாயகி பாரதியும்இந்தப் படத்தில் பப்பளத்துள்ளார்.

இந்த இருவரும் கூட பத்தாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில்ரேகாஸ்ரீயையும் கூட சேர்ந்து குத்துப் பாட்டுக்கு கொத்த வைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த ரேகாஸ்ரீ ஆடுபுலி ஆட்டத்தில் படு அமர்க்களமான ஆடியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இப்படி மும்முனைத் தாக்குதலுடன் கூடிய இப்படத்தில் ரிஷிராஜும் தலையைக்காட்டியுள்ளாராம். படத்தில் அவருக்கும் முக்கிய வேடமாம். கதை என்னவோகண்ணாளா என்று ரிஷிராஜிடம் கேட்டோம்.

இந்தக் காலத்து வாலிபப் பசங்க படிக்கிற வயதில் பல தவறான வழிகளுக்குப் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வழி காட்டுவதே இந்தப் படத்தின்கதை என்று ரொம்ப உருக்கமாகப் பேசினார்.

சமீபத்தில் இப்படத்திற்காக ஆத்து மணல் எடுத்து என்ற ஒரு பாட்டைசுட்டிருக்கிறார்களாம். என்ன விசேஷம் என்றால், படப்பிடிப்பு முடிந்து, பூசணிக்காய்உடைத்த பின்னர் எடுக்கப்பட்ட பாடலாம் இது. வழக்கமாக பூசணிக்காய் உடைத்துவிட்டால் படம் அவ்ளோதான் (அதாவது ஷூட்டிங் முடிந்தது!) என்று அர்த்தம்.

ஆனால் மரபை உடைத்து அந்தப் பாட்டை சுட்டுள்ளார்கள் என்றால் பாடலுக்குஆர்.கே.சுந்தர் போட்டுத் தந்துள்ள இசைதான் காரணம் என்கிறார் ரிஷிராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X