twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுசா இருக்கு லட்சுமி வால்டர் வெற்றிவெல் படம் ஞாபகம் இருக்கா.தனது ஊர்க்காரரான (கேரளா) தேவாரத்தை அடிப்படையாக வைத்து ஒரு காரெக்டரை உருவாக்கினாரேஇயக்குனர் பி.வாசு. (ஆமாங்க.. வால்டர் தேவாரத்துக்கும் வாசுவுக்கும் பூர்வீகம் கேரளா தான்).அதில் வால்டராக நடித்தார் தகடு தகடு சத்யராஜ். அதுவரை போலீசாரை பாராட்டி எடுக்கப்படும் படங்களைமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தார் விஜய்காந்த். அந்த நேரத்தில் போலீசாரை நல்லபடியாகக் காட்டும்கதையாக வந்த வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜ் நடித்தார்.இதில் சத்யராஜுக்கு ஜோடியாக சுகன்யா நடிக்க, அவருக்கு பார்வை இருக்காது. இருந்தாலும் கஷ்டப்பட்டு ஒருகுழந்தையை தோளில் போட்டுக் கொண்டு மன்னவா.. மன்னவா என்று பாடுவாரே. அந்தக் குழந்தை பற்றியசின்ன பிட் ஸ்டோரி தான் இது.(அதுக்கு ஏன்யா.. வால்டரு, விஜய்காந்து... கேரளாவையெல்லாம் எல்லாம் இழுத்தீங்க..)அந்த குழந்தை இப்போது நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறது. அந்தக் குழந்தையின் பெயர் தனலட்சுமி.குட்டி பேபியாக சினிமாவுக்கு வந்த தனலட்சுமி அப்புறம் படிக்கப் போய்விட்டு இப்போது வளர்ந்துஆனானவுடன் மீண்டும் கோடம்பாக்கத்தில் எண்ட்ரி விட்டுள்ளார்.இலக்கியம் என்ற நல்ல பெயர் கொண்ட ஒரு படத்தில் நடிகை உமாவுக்கு தங்கச்சியாக நடிக்கிறார் தனலட்சுமி.அப்படியே புதுசா இருக்கு ( வடிவேலு ஸ்டைலில் சொல்லிப் பாருங்க..) என்ற படத்தில் சரண்ராஜுக்கு மகளாகநடிக்கிறார். தமிழ் இல்லாட்டி ஆந்திரா இல்லாட்டி கன்னடா என்று பிழைக்கத் தெரிந்த அதே சரண்ராஜ் தான்,மீண்டும் இப்போது தமிழுக்கு வருகிறார்.முன்பு குழந்தை நட்சத்திரம், இப்போது தங்கச்சி, மகள் என்று கோலிவுட்டில் பாசக்காரப் புள்ளயாகவே காலம்போய்விடுமோ என்று பயப்படும் தனலட்சுமியின் அடி மனசில் ஹீரோயின் கனவு கோவில் கட்டிஉட்கார்ந்திருக்கிறதாம்.வேப்பிலை அடித்தாலும் அந்தக் கனவு கலையாதாம். ஹீரோயின் ஆனா என் பேரை தமி அப்படின்னுமாத்திக்குவேன் என்று சொல்லி மிரட்டுகிறார் தனலட்சுமி.வெறும் மி என்று கூட வைத்துக் கொள்ளலாம். முதல்ல சான்ஸ் கிடைக்கட்டுமே மாமி, ஸாரி தமி ஸாாாரிதனலட்சுமி.

    By Staff
    |

    வால்டர் வெற்றிவெல் படம் ஞாபகம் இருக்கா.

    தனது ஊர்க்காரரான (கேரளா) தேவாரத்தை அடிப்படையாக வைத்து ஒரு காரெக்டரை உருவாக்கினாரேஇயக்குனர் பி.வாசு. (ஆமாங்க.. வால்டர் தேவாரத்துக்கும் வாசுவுக்கும் பூர்வீகம் கேரளா தான்).

    அதில் வால்டராக நடித்தார் தகடு தகடு சத்யராஜ். அதுவரை போலீசாரை பாராட்டி எடுக்கப்படும் படங்களைமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்தார் விஜய்காந்த். அந்த நேரத்தில் போலீசாரை நல்லபடியாகக் காட்டும்கதையாக வந்த வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜ் நடித்தார்.

    இதில் சத்யராஜுக்கு ஜோடியாக சுகன்யா நடிக்க, அவருக்கு பார்வை இருக்காது. இருந்தாலும் கஷ்டப்பட்டு ஒருகுழந்தையை தோளில் போட்டுக் கொண்டு மன்னவா.. மன்னவா என்று பாடுவாரே. அந்தக் குழந்தை பற்றியசின்ன பிட் ஸ்டோரி தான் இது.

    (அதுக்கு ஏன்யா.. வால்டரு, விஜய்காந்து... கேரளாவையெல்லாம் எல்லாம் இழுத்தீங்க..)

    அந்த குழந்தை இப்போது நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறது. அந்தக் குழந்தையின் பெயர் தனலட்சுமி.

    குட்டி பேபியாக சினிமாவுக்கு வந்த தனலட்சுமி அப்புறம் படிக்கப் போய்விட்டு இப்போது வளர்ந்துஆனானவுடன் மீண்டும் கோடம்பாக்கத்தில் எண்ட்ரி விட்டுள்ளார்.

    இலக்கியம் என்ற நல்ல பெயர் கொண்ட ஒரு படத்தில் நடிகை உமாவுக்கு தங்கச்சியாக நடிக்கிறார் தனலட்சுமி.

    அப்படியே புதுசா இருக்கு ( வடிவேலு ஸ்டைலில் சொல்லிப் பாருங்க..) என்ற படத்தில் சரண்ராஜுக்கு மகளாகநடிக்கிறார். தமிழ் இல்லாட்டி ஆந்திரா இல்லாட்டி கன்னடா என்று பிழைக்கத் தெரிந்த அதே சரண்ராஜ் தான்,மீண்டும் இப்போது தமிழுக்கு வருகிறார்.

    முன்பு குழந்தை நட்சத்திரம், இப்போது தங்கச்சி, மகள் என்று கோலிவுட்டில் பாசக்காரப் புள்ளயாகவே காலம்போய்விடுமோ என்று பயப்படும் தனலட்சுமியின் அடி மனசில் ஹீரோயின் கனவு கோவில் கட்டிஉட்கார்ந்திருக்கிறதாம்.

    வேப்பிலை அடித்தாலும் அந்தக் கனவு கலையாதாம். ஹீரோயின் ஆனா என் பேரை தமி அப்படின்னுமாத்திக்குவேன் என்று சொல்லி மிரட்டுகிறார் தனலட்சுமி.

    வெறும் மி என்று கூட வைத்துக் கொள்ளலாம். முதல்ல சான்ஸ் கிடைக்கட்டுமே மாமி, ஸாரி தமி ஸாாாரிதனலட்சுமி.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X