twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செவக்க வச்ச கருத்த மச்சான்! கருத்த மச்சான் விஜயகாந்ததும், செவத்த அழகி லஷ்மி ராயும் சேர்ந்து பாடும்சூப்பர் பாட்டு ஒன்றை தர்மபுரிக்காக சுடப்பட்டுள்ளது. அடாதடா இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில், அரசியல்வாதி விஜயகாந்த்ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபுரி. பெரிய அடிதடியே படத்தில் நடந்து வருகிறதாம்.பயந்துபோயிடாதேள், படம் முழுக்க அனல் பறக்கும் வசனங்களையும் பஞ்ச்சண்டை காட்சிகளையும் வைத்துள்ளாராம் பேரரசு. பாடல்களையும் கூட படு சூடாகஎழுதியுள்ளாராம்.சமீபத்தில்ஒரு பாட்டை சுட்டுள்ளார்கள். விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கும் லஷ்மிராயும் (வேற எந்த ஹீரோயினும் கேப்டனுடன் நடிக்க மறுத்து விட்டதால் ராயைப்பிடித்து இழுத்து வந்துள்ளனர்!) சேர்ந்து இந்தப் பாட்டுக்கு செம மஜக் ஆட்டம்போட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டில் வரும் வரிகள் எல்லாம் இலைமறை காய் மறையாக பெட்ரூம்அந்தரங்கத்தை புட்டு புட்டு வைக்கும் வகையில் இருப்பதுதான் விசேஷம்.பாட்டின் முதல் வரியைப் படியுங்கள், முழுப் பாட்டும் எதைப் பற்றி என்பதுவெலாவாரியாக புரியும்.கருத்த மச்சான் கருத்த மச்சான்கருத்த மச்சாண்டாஎன் கற்பை கொஞ்சம்கற்பைக் கொஞ்சம்செவக்க வச்சாண்டா!இப்பப் புரியுதா பாட்டு எந்த ரூட்டில் போகிறது என்று? இந்தப் பாட்டுக்காகவித்தியாசமான டான்ஸ் மூவ்மென்ட்டை கேப்டனுக்கு சொல்லிக் கொடுத்து ஆடவிட்டனராம். (வழக்கை போல நாக்கை வாய்க்கு வெளியே விட்டு கடித்துக் கொண்டேதான் ஆடியிருப்பாரோ)ஆனால் அவரை விட ராய்க்கு கொடுத்த மூவ்மெண்டதான் பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்கும் வகையில் படு கில்மாவாக இருக்கிறதாம்.பாட்டின் அர்த்தம் தமிழ் தெரிந்தவர்களுக்கு நன்னா புரியும். ஆனால் லஷ்மி ராயோஅர்த்தமே புரியாமல் அமர்க்களமாக ஆடிக் கொடுததுள்ளாராம்.இப்படித்தான் பூவிலங்கு படத்தில், கண்ணில் ஏனோ மின்னல் அடிக்கிறது... என்றவிரக தாபம் நிரம்பிய பாடலை அழகான தமிழ் வரிகளால் காம ரசம் கலந்து விடாமல்அருமையாக கொடுத்திருந்தார் வைரமுத்து.அந்தப் பாட்டுக்கே ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. பேரரசுவின் பாட்டுக்கு என்னவரப் போகிறதோ?

    By Staff
    |

    கருத்த மச்சான் விஜயகாந்ததும், செவத்த அழகி லஷ்மி ராயும் சேர்ந்து பாடும்சூப்பர் பாட்டு ஒன்றை தர்மபுரிக்காக சுடப்பட்டுள்ளது.

    அடாதடா இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில், அரசியல்வாதி விஜயகாந்த்ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபுரி. பெரிய அடிதடியே படத்தில் நடந்து வருகிறதாம்.

    பயந்துபோயிடாதேள், படம் முழுக்க அனல் பறக்கும் வசனங்களையும் பஞ்ச்சண்டை காட்சிகளையும் வைத்துள்ளாராம் பேரரசு. பாடல்களையும் கூட படு சூடாகஎழுதியுள்ளாராம்.

    சமீபத்தில்ஒரு பாட்டை சுட்டுள்ளார்கள். விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கும் லஷ்மிராயும் (வேற எந்த ஹீரோயினும் கேப்டனுடன் நடிக்க மறுத்து விட்டதால் ராயைப்பிடித்து இழுத்து வந்துள்ளனர்!) சேர்ந்து இந்தப் பாட்டுக்கு செம மஜக் ஆட்டம்போட்டுள்ளார்களாம்.

    இந்தப் பாட்டில் வரும் வரிகள் எல்லாம் இலைமறை காய் மறையாக பெட்ரூம்அந்தரங்கத்தை புட்டு புட்டு வைக்கும் வகையில் இருப்பதுதான் விசேஷம்.

    பாட்டின் முதல் வரியைப் படியுங்கள், முழுப் பாட்டும் எதைப் பற்றி என்பதுவெலாவாரியாக புரியும்.

    கருத்த மச்சான் கருத்த மச்சான்
    கருத்த மச்சாண்டா
    என் கற்பை கொஞ்சம்
    கற்பைக் கொஞ்சம்
    செவக்க வச்சாண்டா!

    இப்பப் புரியுதா பாட்டு எந்த ரூட்டில் போகிறது என்று? இந்தப் பாட்டுக்காகவித்தியாசமான டான்ஸ் மூவ்மென்ட்டை கேப்டனுக்கு சொல்லிக் கொடுத்து ஆடவிட்டனராம். (வழக்கை போல நாக்கை வாய்க்கு வெளியே விட்டு கடித்துக் கொண்டேதான் ஆடியிருப்பாரோ)

    ஆனால் அவரை விட ராய்க்கு கொடுத்த மூவ்மெண்டதான் பாட்டு வரிகளுக்கு உயிர்கொடுக்கும் வகையில் படு கில்மாவாக இருக்கிறதாம்.

    பாட்டின் அர்த்தம் தமிழ் தெரிந்தவர்களுக்கு நன்னா புரியும். ஆனால் லஷ்மி ராயோஅர்த்தமே புரியாமல் அமர்க்களமாக ஆடிக் கொடுததுள்ளாராம்.

    இப்படித்தான் பூவிலங்கு படத்தில், கண்ணில் ஏனோ மின்னல் அடிக்கிறது... என்றவிரக தாபம் நிரம்பிய பாடலை அழகான தமிழ் வரிகளால் காம ரசம் கலந்து விடாமல்அருமையாக கொடுத்திருந்தார் வைரமுத்து.

    அந்தப் பாட்டுக்கே ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. பேரரசுவின் பாட்டுக்கு என்னவரப் போகிறதோ?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X